Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை தயாரிக்கும் பா.ரஞ்சித்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, படங்களை தயாரித்திருந்தது. அதனை தொடர்ந்து “குதிரைவால் ” திரைப்படமும் தயாரித்து வெளியீட்டிற்கு தயராக இருக்கிறது. தொடர்ந்து “ரைட்டர்” மற்றும் “பொம்மை நாயகி” படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கும் “சேத்துமான்” எனும் படமும் படப்பிடிப்பு நிறைவுபெற்று வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் கேரளாவில் நடைபெறவிருக்கும் ( IFFK (International Film Festival Of Kerala) திரையிடலுக்காக தேர்வாகியிருக்கிறது “சேத்துமான் “திரைப்படம்.

தயாரிப்பு நீலம் புரொடக்சன்ஸ். ஒளிப்பதிவு-பிரதீப் காளிராஜா.. எடிட்டிங்  சிஎஸ் பிரேம் குமார்.. இசை  பிந்து மாலினி. பாடல்கள் யுகபாரதி, பெருமாள் முருகன், முத்துவேல்.. கலை ஜெய்குமார். சண்டை  ஸ்டன்னர் சாம். ஒலி வடிவமைப்பு ஆண்டனி BJ ருபன்.. கதை ,வசனம் பெருமாள் முருகன்..  திரைக்கதை இயக்கம் தமிழ். தயாரிப்பு  பா.இரஞ்சித் .. பி ஆர் ஓ – குணா..

Related posts

War 2’s India advance booking: Hrithik & NTR Promo

Jai Chandran

சீரடி சாய்பாபா மகிமை: பிரியா பாலு இயக்குகிறார்

Jai Chandran

PushpaTheRise Part – 01 in cinemas this December

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend