Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

விஜய் சேதுபதி இயக்குனரின் கொரோனா குமார்

விஜய் சேதுபதி இயக்குனரின்
கொரோனா குமார்

இன்று நம் தொலைபேசியில் யாருக்கு அழைத்தாலும் முதலில் வரும் எதிர்க்குரல் கொரோனா வைரஸ் பற்றியதுதான். நம்மில் பலர் இந்த காலகட்டத்தில் தான் ஒருவருக்கொருவர் தரும் அன்பும் ,ஆதரவும் நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் ,நண்பர்களுக்கும், சமூகத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர தொடங்கியுள்ளோம். நம் பலருடைய வாழ்க்கையில் இந்த கொரோனா வைரஸ் பல மாற்றங்களை ஏற்படுத் தியுள்ளது. 

இந்த விசயங்களை மையப்படுத்தி நகைச்சுவை ததும்ப, இயக்குநர் கோகுல் அவர்கள் புதிய படமொன் றை இயக்கவுள்ளார். தனது படத்துக்கு “கொரோனா குமார்” என்று பெயரிட்டுள் ளார். “ குமுதா ஹேப்பி அண்ணாச்சி” “மச்சி லவ் மேட்டர் பீல் ஆய்டாப்ள “ போன்ற காமெடி ட்ரெண்டிங் வசனங்கள் மூலம் இளைஞர் களை பரவசப்படுத்தி, வசன காமெடி மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட் டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கியவர் கோகுல், அடுத்ததாக அதே பாணியில் முழுக்க முழுக்க நகைச் சுவையை மட்டுமே பின்னணியாகக் கொண்டு கொரொனோவால் அறிவிக்கப்பட்ட லாக் டவுனில் ஏற்படும் சுவாரஸ்ய மான சம்பவங்களை வைத்து இந்த படம்  உருவாக உள்ளது.
கோகுல் இதற்கு முன்னதாக ‘ரெளத்திரம்’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ ஆகிய படங்களை யும் இயக்கியவர் என்பது நினைவுக் கூறத்தக்கது.
தற்போது மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஹெலன் ‘ தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார். கோகுலின் அடுத்தப் படமாக ‘கொரோனா குமார்’ திரைப்படம் உருவாக வுள்ளது.
’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் உள்ள சில முக்கிய  கதாபாத்திரங்களை வைத்து ஒரு விஷயம் செய்ய முடிவெடுக்கும் போது, லாக் டவுன் அறிவித்து விடுகிறார்கள். அதன் பின் நடக்கும் சுவாரசியங்கள், காமெடி யாக சொல்லவுள்ளோம். இந்தப் படம் நல்லதொரு சமூக கருத்துள்ளதாகவும் இருக்கும் என்கிறார் இயக் குனர். இந்தக் காலகட்டத் தில் நாம் எங்கு சென்றாலும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது , தனிமைப்படு துதல் என்று இனம்புரியாத பயத்தை உணர்கிறோம். கொரோனா வைரஸ் என்பது ஒரு தொற்று தான். ஆனால், அந்த கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமியால் நமது மக்களுக்குள்ளேயே சில தவறான புரிந்துணர்வும் வரத் தொடங்கிவிட்டது. அந்த கிருமித் தொற்றுக்காக நம்முடைய மனிதத்தை எங்கும் விட்டுக் கொடுத்து விடக் கூடாது. இந்த மாதிரியான சம்பவங்களை எல்லாம் வைத்துத் தான் முழுக்க காமெடியாக, சமூகக் கருத்துடன் ‘கொரோனா குமார்’ உருவாகிறது.
இந்த திரைப்படம் ஹாலிவுட் அளவில் புகழ்பெற்ற SPINOFF ஜானரில் உருவாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த படமும் ஊரடங்கு மற்றும் தனிமை காலங்களில் நடைபெறு கிறது. விரைவில் படக்குழு பற்றிய தகவல்கள் அறிவிக் கப்படும். ஊரடங்கு விலக்கப்பட்டதும் அரசு விதித்துள்ள விதிமுறை களை பின்பற்றி உடனடியாக படப்பிடிப்பு தொடங்கவுள் ளது படக்குழு. பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைந்திருக்கும் இந்தப் படத்தை சினிமாவாலா பிக்சர்ஸ் கே.சதீஷ் தயாரிக்கவுள்ளார். இதில் யாரெல்லாம் நடிக்கவுள் ளார்கள் என்ற விவரத்தை விரைவில் அறிவிக்கவுள் ளார்கள்.
மனநெருக்கடி நிறைந்த இந்த காலகட்டத்தில் இந்த திரைப்படம் அதை போக்கும் விதமான தரமான நகைச் சுவை படமாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரி விக்கிறது

Related posts

அரசு பள்ளிகளில் சினேகா நடித்த ஹரிதாஸ் திரையீடு

Jai Chandran

விஜய் சேதுபதி படத்துக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு

Jai Chandran

திருப்பதி பிரதர்ஸ் வெளியிடும் “பிகினிங்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend