சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கிறது. கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டிபிடிக்க பல்வேறு நாடுகளில் மருத்துவ ஆராய்ச்சி கள் நடக்கின்றன.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு கோடிக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கான மருந்து காண்டுபிக்கும் முயற்சி மற்ற நாடுகளைப் போல் இந்தியாவிலும் ஆராய்ச்சி நடந்து வந்தது. தற்போது கொரோனா வைரஸுக்கு ‘கோவேக்சின்’ என்ற தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.
இந்த மருந்தை மனிதருக்கு செலுத்தி சோதனை நடத்தி அனுமதி அளிக்கப்பட்டி ருக்கிறது. இதற்கான பரிசோதனைக்கு 3,500 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து ‘கோவேக்சின்’ டெல்லியை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவருக்கு இன்று செலுத்தப்பட்டு உள்ளது. தடுப்பு மருந்து செலுத்திய டெல்லி நபருக்கு 2 மணி நேரம் டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். பக்க விளைவுகள் எதுவும் கண்டறியப்பட வில்லை. ஒரு வாரம் வரை அந்த நபர் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
previous post