கொரோனா மக்களுக்கு பெரும் துன்பத்தை தந்திருக்கிறது. மாணவர்கள் கல்லூரி, பள்ளிகளுக்கு செல்லாமல் ஆன்லைனில் படிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. பள்ளி. கல்லூரி தேர்வுகள் எப்படி நடக்கும், என்ற கேள்வி பல தரப்பில் எழுந்தாலும் அந்த பணிகள் ஆன்லைனில் நடநதுக்கொண்டிருக்கிறது.
என்ஜினியரிங் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அவர்களுக்கு உற்சாக அறிவிப்பாக புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் என் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கேள்விகள் நேரடியாக கேட்கப்படாமல், மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது. சந்தேகம் ஏற்பட்டால் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து விடை அளிக்கலாம். தேர்வின்போது இண்டர்நெட்டை பயன்படுத்தவும் அனுமதிப்படுவதாக அண்ணா பல்கலை கழகம் அறிவித்திருக்கிறது.