Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒன்றிணைந்து மாற்றுவோம்: பா.ராஞ்சித்துக்கு உதயநிதி அழைப்பு

உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்பட குழுவின ருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் பா. ரஞ்சித் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:

மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப் படுத்தி இருக்கிறது. உண்மை யாகவே தனித்தொகுதி எம்.எல்.ஏ க்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற் கான காரணம் என்ன?அவர்களுக் கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று #மாமன்னன். உண்மை யாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திமுக கட்சியில் இன்று வரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கை யின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ் #வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!

இவ்வாறு பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு மாமன்னன் பட நாயகன்  உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதில் அளித்திருப்பதுடன் சமூக மாற்றத்தை நிகழ்த்த பா ரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்திருக் கிறார்.

உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர்  பக்கத்தில் கூறியிருப்ப தாவது:

‘மாமன்னன்’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.ரஞ்சித்துக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் – ஏற்றத் தாழ்வும் திமுக மட்டுமல்ல, எந்தக் கட்சிக்குள் இருந்தாலும், அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதை யை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது திமுக.ஆ ட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூக நீதி’யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது திமுக அரசு. அண்ணா – கருணாநிதி வழியில் எங்கள் கட்சித் தலைவரும் இப்பணியைத் தொடர்கிறார்.

‘பராசக்தி’யில் தொடங்கி ‘மாமன்னன்’ வரை கலை வடிவங்களிலும் ‘சமூக நீதி’யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.

ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்துக்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டு கால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும் கூட. ஒரே திரைப் படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார் – அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத் தை நிகழ்த்த முடியும். அதை நோக்கி நாம் அனைவரும் ஒன்றி ணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் திமுக மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் ரஞ்சித்துக்கு நன்றி. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள் ளார்.

 

 

Related posts

டிசம்பர் 24ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா

Jai Chandran

பிக்பாஸ் சீசன் 8, அதிரடியில் அசத்தும்  விஜய் சேதுபதி !!

Jai Chandran

சிலம்பரசனை சென்னையில் சந்தித்த வாரியர் ராம் பொத்தினேனி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend