ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா ட்ரிக்கா ஜோடியாக நடிக்கும் படம் “ஜோ”.
மேலும் சார்லி, அன்பு தாசன், ஏகன், விக்னேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை எழுதி இயக்கு கிறார் ஹரிஹரன் ராம். எஸ்., ராகுல் கேஜி விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்து குமார் இசை அமைத்தி ருக்கிறார். டாக்டர் டி. அருளாந்த், மேத்திவோ அருளானந்த் தயாரித்தி ருக்கிறார்கள். கே. ஶ்ரீநிவாஸ் நிரஞ்சன் இணை தயாரிப்பு செய்துள்ளார். பவர் பாண்டியன் ஸ்டண்ட் அமைத்துள்ளார். ஏ பி ஆர் அரங்கம் நிர்மாணிக் கிறார். வருண். கே.ஜி எடிட்டிங் செய்கிறார். பி ஆர் ஒ :சுரேஷ் சந்திரா (D’one), ரேகா
படம்.பற்றி இயக்குனர் ஹரிஹரன் ராம். எஸ் .கூறியதாவது:
கல்லூரியில். படிக்கும் ரியோ அதே கல்லூரியில் படிக்கும் கேரள பெண் மாளவிகா. மனோஜை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலர்களாகி மனம் ஒன்றி பழகுகிறார்கள் .திடீரென்று இவர்கள் காதல் முறிய வேறுவொரு பெண் ரியோ வாழ்வில் குறுக்கிடுகிறார். பிரிந்த காதல் எண்ணவாகிறது என்பதற்கு படம்.பதில் சொல்கிறது.
இப்படத்தின் 2ம் பகுதி காதலை எழுதிய பிறகு முதல் பகுதி காதலை எப்படி இணைத்து கொண்டு வருவது என்று யோசித்தபோது என் வாழ்வில் நடந்த நிஜ காதலை முதல் பகுதி கதையாக எழுதினேன் அது மிகவும் பொருத்த மாக அமைந்தது. முதலில் இந்த கதையை பல ஹீரோயின்களுடன் சொல்லியும் யாரும் நடிக்க முன்வரவில்லை. பின்னர் மலையாளத்தில் நடித்து ஒரே படத்தில் புகழ் பெற்ற மாளவிகா மனோஜிடம் சொன்னபோது நடிக்க ஒப்புக்கொண்டார்.
இதன் படப்பிடிப்பு தமிழ் நாடு,. கேரள பார்டரில் உள்ள கல்லூரி யில் நடந்துள்ளது.
இப்படத்தில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடியதுடன் நடித்தும் இருக்கிறார். பிற இசை அமைப்பாளர் படத்தில் அவர் பாடி இருக்கிறார்.ஆனால் இந்த படத்தில் வேறு அமைப்பாளர் இசையில் பாடியதுடன் நடித்தும்.இருக்கிறார். அது படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது இப்படத்துக்கு சித்து குமார் இசை அமைத் துள்ளார்
இவ்வாறு இயக்குனர் கூறினார்.
ரியோ ராஜ் கூறும்போது, ‘நான் நடிக்கும் 3வது படம் ஜோ. ஜாலி யான கதா பாத்திரம். படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. 2கே இளவட்டங்களை மட்டுமல்ல 90ஸ் கிட்ஸ் களையும் இது கவரும்” என்றார் .
