Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

7 பெரிசுகளும் இயக்குனரை படுத்தியபாடு.. சியான்கள் படப்பிடிப்பில் ருசிகரம்..

’சுப்ரமணியபுரம்’ படத்தில் சசிகுமாரிடம் உதவி இயக்குனாராக இருந்த வைகறை பாலன் இயக்கி உள்ள படம் சியான்கள். இப்படத்தை தயாரித்து டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கரிகாலன். இப்படத்தின் பத்திரிகையாளர் மீடியா சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.

இப்படத்தில் நடித்த சியான்கள் அதாவது பெரிசுகள் நளினிகாந்த், பசுபதி ராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரை சுந்தரம், சமுத்ரசீனி, சக்திவேல் நாராயணசாமி, மற்றும் நடிகர் இமை ராஜ் குமார், இயக்குனர் வைகறை பாலன் மற்றும் படக் குழுவி னர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் வைகறை பாலன் கூறியதாவது:

சியான்கள் படம் ஒரு அனுபவபூர்வமான படம். சிறுவயது முதல் ஊர்களில் இதுபோன்ற சம்பவங்கள் பார்த்திருக்கலாம், கேட்டிருக்கலாம். இந்த கதை கிடைத்தவுடன் அதற்கு சரியான பொருத்தமான முகங்களை தேர்வு செய்வது என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு நடிகர்கள் தேர்வு நடந்தது. சிலர் சினிமாவில் ஏற்கனவே நடித்திருந்தாலும் பலர் கேமராவை முதல்முறை பார்ப்பவர்கள். நளினிகாந்த் சினிமாவில் நடித்திருப்பவர். அதேபோல் மற்றொருவரையும் நீங்கள் படங்களில் பார்த்திருக்கலாம்.

புதியவர்களை நடிக்க வைத்து வேலை வாங்குவது கடினமாக இருந்தது. பார்வையை எந்த பக்கம் பார்க்க வைப்பது, எந்த பக்கம் பார்த்து வசனம் பேசுவது என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதற்கு சிரமமாக இருந்தது. வசன பேப்பரை கொடுத்தவுடன் திரு திருவென விழிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிறகு படப்பிடிப்பின்போது சொன்னதை பேசி நடித்தார்கள். இதில் நடித்த சில பெரியவர்கள் சினிமாவுக்கு புத்திது என்பதால் படப் பிடிப்பு நாட்கள் கூடுதலாகி விட்டது. முதல்படம் நல்ல படமாகவும் அது மக்களின் மனதை தொடும் படமாக இருக்க வேண்டும் என்று இப்படத்தை இயக்கினேன்.

இவ்வாறு இயக்குனர் வைகறை பாலன் கூறினார்.


படம் பற்றி தயாரிப்பாளரும் நடிகருமான கரிகாலன் கூறியதாவது:
நானும் இயக்குனரும் நல்ல நண்பர் கள். படம் உருவாக்க வேண் டும் என்பது எங்கள் ஆசை அதற்காக பல கதைகளை தேர்வு செய்தோம். என் மனைவி லில்லிகரிகாலன் ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய கதை ஒன்றை என்னிடம் சொன்னார். அதை இயக்கு னரிடம் சொன்னபோது வித்தியாசமாக இருக்கிறது இதையே படமாக எடுப் போம் என்று முடிவு செய்தோம். என் மனைவி சொன்ன கதை சியான்கள் என்ற பெயரில் படமாக உருவாகி ரிலீஸுக்கு வந்திருக்கிறது. அந்த படத்தை பார்த்த இன்னொரு பெண் மணி படத் தை வாங்கி ரிலீஸ் செய்கிறார்.
சிறுகுழந்தையாக இருப்பது முதல் நம்மை பெற்றோர் வளர்க்கின்றனர் அவர்கள் வளர்ந்தபின் தங்களை வளர்த்த பெற்றோ ரை புறந் தள்ளுகிறார்கள். அது கூடாது. அவர்களை காப்பாற்ற வேண் டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது. இதில் நடித்த முதியவர்கள் எல்லோ ருமே இயல்பான நடிப்பை வழங்கினார்கள். தேனி பகுதி யில் செங்குத்தான மலைப் பகுதியில் படப்பிடிப்பு நடந்த இந்த வயதிலும் அவர்கள் படக் குழுவினருடன் கருவி களை சுமந்துக்கொண்டு மலை உச்சிக்கு வந்து நடித்துக் கொடுத்தனர், பல படங் களுக்கு பாடல்கள் எழுதிய முத்தரசன் இப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இவ்வாறு கரிகாலன் கூறினார்.

சியான்கள் பேசும்போது, ’இந்த படத்தில் வரும் காட்சிகள் போல் எங்கள் வாழ்க்கையில் நடந்ததில்லை. நாங்கள் வீடுகளில் மரியாதையுடன் இருக்கிறோம் ஆனால் இதுபோல் அவதிப்படும் வயதானவர்களின் வாழ்க்கையில் நடித்தபோது அதுவே பெரிய அனுபவமாக இருந்தது. இப்படிப்பட்ட பிள்ளைகள் திருந்த வேண்டும். பெற்றவ்ர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக அந்த எண்ணம் வரும்’ என்றனர்.
.

Related posts

எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் கே.பாக்யராஜ் வெற்றி

Jai Chandran

லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்த *”கடிகார மனு” : மநீம

Jai Chandran

கேன்ஸ் பட விழா சென்ற செங்கொடி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend