தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் சமபந்தி கறி விருந்து அளித்த நடிகர் விஷால்….
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் #vishal34 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிர மாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் திபாவளி தினமான இன்றும் படப் பிடிப்பு நடைப்பெற்று வருவதால் படப்பிடிப்பில் பணியாற்றும் அனைவ ருக்கும் நடிகர் விஷால் தரப்பிலிருந்து சமபந்தி கறி விருந்து அளிக்கப் பட்டது.
நடிகர் விஷாலின் படப்பிடிப்பில் எப்போதும் கடைநிலை ஊழியர் தொடங்கி பெரிய நட்சத் திரங்கள் உட்பட அனைவ ருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்பதை நடிகர் விஷால் உறுதியாக கடைபிடித்து வருகிறார்.
மேலும், கேப்டன் விஜய காந்த் தொடங்கி வைத்த இந்த அனைவரும் சமம் நாமும் தொடர வேண்டும் என 10 வருடங்களுக்கு முன்பே அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்று தன்னு டைய படப்பிடிப் பிலும் தன்னுடைய அலுவலகத் திலும் நடிகர் விஷால் உத்தரவாக பிறப்பித்து இருந்ததது குறிப்பிடத் தக்கது.
