பத்மவிபூஷண்” பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் இன்று காலை10.30 மணி அளவில் “பத்மவிபூஷண்” “இசைஞானி” இளையராஜா தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பொதுச்செயலாளர் ஜோனாபக்தகுமார்எஸ்.டி., தலைமையேற்க வந்திருக்கும் இசைஞானி , மும்பையிலிருந்து இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த இசையமைப்பாளர் மற்றும் ஒலிப்பதிவாளர் உத்தம்சிங், சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி, எஸ் பி பி குடும்பத்தின் சார்பாக வந்திருந்த இசையமைப்பாளர் வாசுராவ் ஆகியோரை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் இளையராஜா பேசும் போது அவருக்கும் எஸ் பி பிக்கும் உள்ள தெய்வீக நட்பை மற்றும் அவருடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூர்ந்தார் . தலைவர் தினா அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்தார்.
