பிரதமருக்கு நடிகை வரலட்சுமி எழுப்பும் கேள்விகள்
ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்து மருத்துவ கல்லூரி மனைவி நிர்பயா கொல்லப்பட்டார். இதில் கைதான 4 குற்றவாளிகளுக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சம்பவம் நடந்து 7ஆண்டு தாமதமாக இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி,’நீதி நிறைவேற்றப்பட்டது’ என டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
சர்க்கார், சண்டக்கோழி 2ம் பாகம் படங் களில் நடித்துள்ள நடிகை வரலக்ஷ்மி பிரதமரின் டிவிட்டர் கருத்து குறித்து சில கேள்வி எழுப்பி உள்ளார். ‘ஏழு வருடங் களுக்கு பிறகு தண்டனை நிறைவேற்றப் பட்டதை நீதி நிறைவேற்றப்பட்டதாக உண்மையில் நினைக்கிறீர்களா? 6 மாதங்களுக்குள் பெண்கள் பாலியல் பலாத்கார கொலை சம்பவத்தில் ஏன் நீதி வழங்கப்படக்கூடாது? இத்தகைய குற்ற செயல்களால் பெண்கள் உயிரிழப்பது எந்தவகையில் நியாயம்? நீதி வழங்க நீண்டகாலம் ஆவது ஏன்? என சரமாரி யாக கேள்வி கேட்டிருக்கிறார் வரலட்சுமி.
# Actress Varalakshmi sarathkumar questions PM Modi On Nirbhaya case phanishment