கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுகழகத்தின் ஆட்சி தமிழகத்தில் நடந்து வந்தது. மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி மக்களின் பாராட்டு பெரும்பாலையில் தனது ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று பெயரிட்டு நடத்தினார்.
திமுக அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி பதவி முடிந்த நிலையில் தமிழகத்தில் புதிய சட்டமன்ற பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்ற பேரவை தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 23ஆம் தேதி அதாவது நேற்று தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது.
மதச்சார்பற்ற கூட்டணி என்று திமுக தலைமையில் ஒரு அணியும் தேசிய ஜனநாயக கூட்டணி என்று அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிட்டன. தவிர நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டாக்டர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி, சசிகலா நடராஜன் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் பெயரில் தொடங்கிய கட்சி ஆகியவையும் இந்த தேர்தலில் போட்டியிட்டன.
மொத்தம் 4,023 பேர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 14.59 லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்கள் உட்பட மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
மேலும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர், 83,875 காவல் துறையினர், 40,427 காவல் துறை அல்லாத முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
வாக்குச்சாவடி பணியில் 3.40 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். 1.06 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க தொடங்கினர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
தமிழகத்தில் இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்களித்ததால், வாக்குப்பதிவு 85 சதவீதம் பதிவானது. இதுவரை இல்லாத அளவுக்கு இம்முறை 85 சதவீதம் வாக்கு பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக தேர்தல் வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.
