தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நேற்று முன்தினம் அதிகாலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டார்.
அவருக்கு கொரோனா தொற்று உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப் பட்டது. 2நாட்கள் சிகிச்சைக்கு பிறகு விஜய காந்த் மருத்துவமனை யிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.