Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

வி பி எப் கட்டணம்: எதிர்த்து கியூப் நிறுவனம் முற்றுகை போராட்டம்.. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு…

தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப் பாளர்கள்‌ சங்கத்தின்‌ செயற் குழு கூட்டம்‌ சென்னை யில் நேற்று தென்னிந்திய திரைப் பட வர்த்தகசபை வளாகத்தில்‌ நடைபெற்றது. அதில்‌ எடுக்கப் பட்ட முக்கிய தீர்மானங்கள்‌ பற்றிய அறிக்கை:

1) தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்‌
தமிழக முதல்வரருக்கும்‌, துணை முதல்வருக்கும்‌, தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப் பாளர்கள்‌ சங்கம்‌ தான்‌ பிரதான சங்கம்‌ என்று அறிவித்த செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ கடம்பூர்‌ ராஜீக்கும்‌
இந்த செயற்குழு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து தீர்மானம்‌ நிறைவேற்றப் பட்டது.

2) 2020-2022ம்‌ ஆண்டு களுக்கான தேர்தலை நடத்த முழு ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கும்‌, தேர்தலை சிறப்பான முறையில்‌ நடத்திய நீதியரசர்‌ எம்‌.ஜெய்சந்திர னுக்கும்‌, தனி அதிகாரிக்கும்‌ மற்றும்‌ ஒத்துழைப்பு. நல்கிய டாக்டர்‌.எம்‌.ஜி.ஆர்‌. ஜானகி கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி நிர்வாகத் தினருக்கும்‌, காவல்துறைக்கும்‌ நன்றி தெரிவித்து தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

3) தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ உறுப்பினர்கள்‌ இனி வரும்‌ காலங்களில்‌ அவர்களது திரைப்படத்திற்கு விபிஎப் கட்டணம்‌ செலுத்த மாட்டார் கள்‌ என்று முடிவெடுக்கப் பட்டது. மேலும்‌, இது குறித்து. டிஜிட்டல் சர்வீஸ் புரவைடர் (கியூப்) நிறுவனம்‌ வருகிற 09.12.2020க்குள்‌ சரியான முடிவு தெரிவிக்காத பட்சத்தில்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌. தயாரிப் பாளர்கள்‌ சங்க உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ ஒன்றினைந்து டிஜிட்டல் சர்வீஸ் புரவைடர் (கியூப்) நிறுவனம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மான நிறைவேற்றப்பட்டது.

4) தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ நிரந்தர உறுப்பினர்களுக்கு வருடா வருடம்‌ பொங்கல்‌ பரிசு வழங்கி வருவது போல்‌ இந்த வருடமும்‌ தயாரிப்பா ளர்களின்‌ இல்லத்திற்கே நேரடியாக பொருட்கள்‌ செல்ல ஏற்பாடு செய்யப்படும்‌ என்று தீர்மானம்‌ நிறைவேற் றப்பட்டது.

5) மத்திய மற்றும்‌ மாநில அரசுகளின்‌ ஆணைப்படி ஆன்லைன் டிக்கெட் வசதி உள்ள திரையரங்குகளுக்கு மட்டுமே தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க உறுப் பினர்கள்‌ திரைப்படங்களை வெளியிடுவது என்று தீர்மானமாக நிறைவேற்றப் பட்டது.

6) இனிவரும்‌ காலங்களில்‌ தமிழ்த்‌ . திரைப்படத்‌ தயாரிப் பாளர்கள்‌ தங்களது. திரைப் படத்தின்‌ வேறு மொழி ரைட்ஸ்‌ விற்கும்‌ பொழுது நமது சங்கத்தில்‌ பதிவு செய்து
கொள்ள வேண்டும்‌ என்று தீரமானம்‌ நிறைவேற்றப் பட்டது.

7) தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தில்‌ ஏற்கனவே இருந்த உறுப்பினர்‌ சேர்க்கை கட்டணமான ரூ.3 லட்சத்தினை தற்போது 50% குறைத்து ரூ.1,50,000 மட்டும்‌ செலுத்தினால்‌ போதும்‌ என்று முடிவெடுக்கப்பட்டு தீர்மான மாக நிறைவேற்றப்பட்டது.

8) தமிழ்த்‌ திரைப்பட தயாரிப் பாளர்கள்‌ கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தினை நமது
தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ அலுவலக முகவரியான எண்‌,606, அண்ணாசாலை,
சென்னை:6க்கு தயாரிப்பா ளர்கள்‌ சங்கத்தின்‌ கட்டுப்பாட் டில்‌ கொண்டுவரப்பட்டு. பையனூரில்‌ உள்ள தயாரிப்பா ளர்கள்‌ சங்கத்திற்கு சொந்த மான இடத்தில்‌ தமிழக அரசு ஒத்துழைப்புடன்‌ அனைத்து தயாரிப்பாளர்களுக்கும்‌ அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தர வழிவகை செய்யப் படும்‌ என்று தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

9) தொடர்ந்து 25 வருடங்கள்‌ சந்தா தொகை கட்டி வந்த வாக்களிக்க தகுதியுள்ள நிரந்தர உறுப்பினர்கள்‌ இன்றைய தேதியிலிருந்து சந்தா தொகை கட்ட தேவை யில்லை அவர்கள்‌ ஆயுட்கால உறுப்பினர்களாக கெளரவிக் கப்படுகிறார்கள்‌ என்று ஏகமன தாக தீர்மானம்‌ நிறைவேற்றப் பட்டது.

10) நமது தாய்‌ சங்கமான தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப் பாளர்கள்‌ சங்கத்தினை பற்றியும்‌, தேர்தலில்‌ வெற்றி பெற்று வந்த நிர்வாகிகள்‌ பற்றியும்‌ ஊடகங்களில்‌ அவதூறாக பேசி, தனியாக போட்டி சங்கத்தினை துவக்கி யுள்ள டி.ராஜேந்தர்‌, சுபாஷ் சந்திரபோஸ்‌, ஜே.எஸ்‌.கே. சதீஷ்குமார்‌, சிங்காரவடி வேலன்‌, கே.ராஜன்‌, பி.டி.செல்வகுமார்‌, வை.ராஜா. அசோக்சாம்ராஜ்‌ ஆகியோர்‌ மீது சங்க சட்ட விதிகளின்‌ படி கடுமையான நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

11) நமது தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ சட்ட விதி எண்‌ 16-படி ஏற்கனவே உள்ள
தலைவர்‌(1), துணைத்தலைவர் கள்‌(2), கெளரவ செயலாளர் கள்‌(2), பொருளாளர்‌(1) மற்றும்‌ செயற்குழு உறுப்பினர்கள்‌ (21) என்ற விதியினை, திருத்தம்‌ செய்யும்‌ விதமாக
இணைச்செயலாளர்கள்‌ (2) சேர்க்க இந்த செயற்குழுவில்‌ ஒப்புதல்‌ பெறப்பட்டு தீரமானம்‌ நிறைவேற்றப் பட்டது.

12) இனி வரும்‌ காலங்களில்‌ தமிழ்த்‌ திரையுலகில்‌ உள்ள மற்ற எந்த ஒரு சங்கத்தின்‌
நிர்வாகக்குழுவில்‌ இருக்கும்‌ உறுப்பினர்கள்‌, நமது தயாரிப் பாளர்கள்‌ சங்கத்தின்‌ தேர்த லில்‌ நிர்வாக பதவிக்கு போட்டியிட இயலாது என்று இந்த செயற்குழுவில்‌ ஒப்பு தல்‌ பெறப்பட்டு தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

13) தயாரிப்பாளர்‌ மைக்கேல்‌ ராயப்பன்‌, ‌ நடிகர்‌ சிம்பு ‌ மீது அளித்த புகார்‌ குறித்து ஏற்கனவே கடந்த நிர்வாகத்தில்‌ எடுத்த முடிவின்‌ அடிப்படையில்‌ நடிகர்‌ சிலம்பரசன்‌ அவர்களை நேரில்‌ அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவு காண்பது என்று முடிவெடுக்கப்பட்டு தீர்மானமாக நிறை வேற்றப்பட்டது.

14) தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌. சங்கத்தின்‌ இணைச்செயலாளராக
கோட்டபாடி ஜே.ராஜேஷை நியமித்து செயற்குழுவில்‌ ஒப்புதல்‌ பெறப்பட்டு ஏகமன தாக தீர்மானம்‌ நிறைவேற் றப்பட்டது. இன்றைய தேதி முதல்‌ கோட்டபாடி
ராஜேஷ்‌ ‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌
இணைச்செயலாளராக செயல் படுவார்‌ என்றும்‌. தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது..

15) உயர்நிலை குழு, டைட்டில்‌ குழு. ஆலேசானைக்குழு, பைலா கமிட்டி போன்ற
குழுக்களை அமைப்பதற்கு நிர்வாகிகளுக்கு அதிகாரம்‌ வழங்கி செயற்குழுவில்‌ ஒப்புதல்‌ அளித்தி தீர்மானாமாக் நிறைவேற்றப்பட்டது.

இன்று நடைபெற்று செயற் குழு கூட்டத்தில்‌ எடுக்கப் பட்ட தீர்மானங்கள்‌ அனைத் தும்‌ சங்க உறுப்பிண்களுக்கு விவரமாக கடிதம்‌ மூலம்‌ அனுப்பி வைக்கப்படும்‌ என்று
தெரிவித்துக்‌ கொள்ளப்படு கிறது. செயற்‌ கட்டத்தில்‌ கலந்து கொண்டவர்கள் விவரம் வருமாறு:

தலைவர்‌:இராமசாமி (௭) முரளி. துணைத்தலைவர்கள்‌ கதிரேசன்‌, ஆர்‌.கே.சுரேஷ்‌. கெளரவ செயலாளர்‌ ஆர்‌.ராதாகிருஷ்ணன்‌, பொருளாளர்‌ சந்திரபிரகாஷ்‌ ஜெயின்.‌ செயற்குழு உறுப்பினர்கள் ஆர்‌.வி.உதயகுமார்‌, அழகன்‌ தமிழ்மணி, மனோபாலா, சக்தி சிதம்பரம்‌, செளந்தரபாண் டியன்‌, மாதேஷ்‌, விஜயமுரளி, ஏ.எல்‌. உதயா, பைஜா டாம்‌
ஜி.எம்‌. டேவிட்ராஜ்‌, பாபுகனேஷ்‌, ராஜேஸ்வரி வேந்தன்‌, அன்பாலயா பிரபாகரன்,‌ கே.கே.ராஜ்சிற்பி, பழனிவேல், எஸ்‌.ராமச்சந்தி ரன்‌, பிரிமூஸ்‌,வீ.சரவணன்‌.
இவ்வாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஷாட் பூட் த்ரீ பட நடிகை கோமலுக்கு விலங்குகள் நல அமைப்பு பாராட்டு

Jai Chandran

குழலி படத்துக்கு இண்டோ பிரஞ்ச் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருது

Jai Chandran

பேட்டைக்காளி இயக்குனர் ல.ராஜ்குமார் அறிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend