கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் கட்சி தொடங்கும் தேதி அறிவிப்பதாகவும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார். அப்போது தமிழருவி மணியனை ரஜினி தனது கட்சியில் பொறுப்பில் நியமித்தார். ஆனால் உடல்நிலைபற்றி குறிப்பிட்டு அரசியலுக்கு வரவில்லை என்னை மன்னித்து விடுங்கள் என்று ரஜினிகாந்த் கூறினார்.மேலும் ரஜினி மன்றத்தினர் தாங்கள் விரும்பும் கட்சியில் சேராலாம் என்றும் அறிவித்தார். ரஜினி மன்றத்தினர் பலர் வேறு கட்சியில் இணைந்தனர்.
ரஜினியின் அறிவிப்பால் ஷாக் ஆன தமிழருவி மணியனின் இனி வாழ்நாள் முழுவதும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித் தார். தற்போது காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழருவி மணியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னு டன் தொடர்பு கொள்கின் றனர். ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன்.
நீங்கள் அனைவரும் ரஜினி ஒருநாள் அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பிலும், முதல்வர் பதவியில் என்றாவது அமர் வார் என்ற கனவிலும் அவரு டைய ரசிகர்களாக மாற வில்லை. அவருடைய இயல் பான நடிப்பு, செயற்கைப் பூச்சு இல்லாத பேச்சு, ஆணவத் திற்குச் சற்றும் இடம் தராத அடக்கம், உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி உரைக்கும் நேர்மை, மிகச் சாதாரண மனிதனாகத் தன்னைப் பாவிக்கும் பண்பு நலன், அனைவரும் வியந்து பார்க்கும் ஆடம்பரமற்ற
எளிமை, அன்பு சார்ந்து ஒவ்வொருவரிடமும் பழகும் உயர்குணம் ஆகியவற்றில் உங்கள் மனதைப் பறிகொடுத் துத்தான் நீங்கள் அனைவரும் அவருடைய ரசிகர்களாக மாறினீர்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவருக்காக எதையும் இழக்கத்
துணியும் உங்கள் உயரிய அர்ப்பணிப்பைக் கடந்த நான்காண்டுகள் நேரில் கண்டு நான் நெஞ்சம் நெகிழ்ந்திருக்கி றேன்.
பாழ்பட்ட அரசியலைப் பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார். காலச்சூழல் அவரு டைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் இப்போது அவர் கட்சி தொடங்குவதைத் தவிர்த்திருக்கிறார். நான்எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று அவர் அறிவிக்க வில்லை.
ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்து விடவுமில்லை. இந்த நிலை யில் அவருடைய கூற்றின்படி சிஸ்டத்தைச் சீரழித்தவர் களிடமே சில ரசிகர்கள் சரண் அடைந்திருப்பதையும், சிலர் இளைப்பாறும் வேடந் தாங்கல் எதுவாக இருக்க முடியும் என்று அலைபாய் வதையும் கண்டு நான் வருந்து கிறேன். ரஜினி மக்கள் மன்றத் திலிருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் இந்த சந்தர்ப்பவாத செயலில் மறந்தும் ஈடுபடாது என்று உறுதிபட அறிவிக்கிறேன்.
காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாகத் தொடர்ந்து செயற்படும். அவரவர் இடத்தில் இருந்தபடி கரங்கள் இணைந்து காரிய மாற்றுவோம். நான்
“ஒரு காந்தியவாதி இறக்கும் நாள்வரை இடையறாமல் தன்னலமின்றி சமூக நலன் சார்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இழிந்த விமர்சனங்களை இம்மியும்
பொருட்படுத்தலாகாது. மாற்று அரசியலை வளர்த் தெடுக்கும் பணியில் நீங்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் “என்று சான்றாண்மை மிக்க மூத்தோர் பலர் வழங்கிய அறிவுரையை ஏற்கிறேன்.
தரம் தாழ்ந்த, தன்னலம் வாய்ந்த அரசியலை என்றும் நான் நடத்தியதில்லை. எந்த லாவணிக் கச்சேரியிலும் ஒரு நாளும் நேரத்தை விரயமாக் காமல் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள பணிகளில் காந்திய மக்கள் இயக்கம் முன்னிலும் முனைப்பாக ஈடுபடும்.
மார்ச் 7ஆம் நாள் திருப்பூரில் பொதுக்குழு கூடவிருக்கிறது. நாளையே ரஜினி அரசியலுக்கு
வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும். அவர் அரசிய லுக்கு வந்தாலும், வராமல் விலக இருந்தாலும் பக்திபூர் வமாக அவரை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் எந்த மன்ற உறுப்பினரும் எவர் விரிக்கும் வலையிலும் சிக்கமாட் டார்கள் என்பது மட்டும் உறுதி.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறி உள்ளார்.
Thamizharivi Maniyan, Rajini