கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் அதிவேகாம பரவி வருகிறது. தமிழகத்திலும். அதன் தாக்கம் அதிகம் உள்ளது. மருத்துவ மனைகள் நிரம்பிக்கொண்டி ருக்கின்றன. அதை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதுன் ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்ட பலவேறு கட்டுப்பாடுகள் விதித்திருக் கின்றன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
தமிழக கல்வித் துறையை பொறுத்தவரை, பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு வீட்டுக் கல்வி திட்டத்தின் கீழ் பாடங்களை நடத்தி வருகின்றன.
மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வராதபோதும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் தொடர்ந்து பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணி களை கவனிக்கின்றனர்.
தற்போது அவர்களும் பள்ளிக்கு வரத்தேவை யில்லை என்ற உத்தரவு வந்திருக்கிறது. வரும் மே 1ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி களுக்கு வரத்தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கும் வரை ஆசிரியர் கள் வீட்டில் இருந்தபடியே வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனவும், மற்ற வகுப்பு மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக பயிற்சிகளை மேற்கொள் ளவும் தெரிவிக்கப்பட்டிருக் கிறது.
next post