Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினியின் “கபாலி” கிளைமாக்ஸ் பற்றி பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சு

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத் துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித் துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.  இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்கு களில் வெளியாகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது:

‘ஜெய்பீம்’ இந்த ஒரு வார்த்தை தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. அட்டகத் தியில் துவங்கிய பயணம் நட்சத்திரம் நகர்கிறது வரை வந்துள்ளது.  நான் யாரையும் வளர்த்து விடவில்லை. அவர்கள் திறமையானவர்கள் அவர்களை நான் பயன்படுத்திக்கொண்டேன் அவ்வளவுதான். அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி
வெங்கட் பிரபு சாரிடம் தான் நான் கற்றுக்கொண்டேன். சென்னை 28 படம் தான் என் வாழ்வை செதுக் கியது. நாம் நினைத்ததை எடுக்க முடியும் என்பதை கற்றுக் கொடுத்தது. சசி சார் நான் உதவி யாளனாக இருந்தபோது என்னை கூப்பிட்டு உட்காரவைத்து பேசினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவரை நான் மறக்க மாட்டேன். என் உதவியா ளர்களிடம் நான் நன்றாக நடந்துகொள்ள அது தான் காரணம். வெற்றிமாறன் ஒரு படத்தை எந்த ஒரு காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுக்கலாம் என்பதை நிரூபித்தவர். இந்த மூன்று பேரும் இங்கிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அடுத்ததாக என் வாழ்வில் இரண்டு தயாரிப்பா ளர்கள் மிக முக்கியமானவர்கள் ஒன்று கலைப்புலி தாணு சார், ஞானவேல் சார். கபாலி படமாயக்கியபோது தாணுசார் தந்த சுதந்திரம் பெரியது. அவருக்கு கபாலி பட க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை  அதுதான் சரியாக. இருக்கும் என்றேன். பேசாமல் எழுந்து சென்றுவிட்டார். படம் வெளிவந்த பிறகு ஹிட் என சொன்னாலும் இண்டஸ்ட்ரியில் பெரிதாக பேசவில்லை மன உளைச்சலில் இருந்தேன், ஆனால் தானுசார்  என்னை கூப்பிட்டு யார் சொல்வதைப்பற்றியும் கவலைப் படாதே என்று  சொல்லி  படத்தின் கலக்க்ஷன் காட்டி என்னை பெரிதும் ஊக்கப் படுத்தினார்.
ஞானவேல் சார் அட்டகத்தி ரிலீஸ் செய்ய வில்லை என்றால் நான் இன்று இங்கிருந்திருக்க மாட்டேன். இவர்கள் எல்லாம் இங்கிருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன்.

யாழி புரடக்சன் மனோஜ் மற்றும் விக்னேஷ் சினிமாவை சரியாக புரிந்து கொண்டவர்கள் அவர்கள் இன்னும் பெரிய சினிமாக்கள் எடுப்பார்கள் என நம்புகிறேன். இப்படத் தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் மிக திறமையானவர் கள் மிக அற்புதமாக நடித்துள் ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் ஒவ்வொரு வரும் என்னை புரிந்து கொண்டு எனக்காக உழைத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. என் குடும்பம், மிளிரன், மகிழினி  என்னை தொந் தரவு செய்யாமல் என்னை ஊக்கப்படுத்து கிறார்கள். என் அம்மா  15 வருடம் முன்  “பார்த்து போயா ஜெயிச்சுட்டு வா” என்று அனுப்பி னார் .இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஜெயிச் சுட்டிருக்கேன்னு நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. காதல் சமூகத்தில் அத்தனை எளிதில்லை அதை இந்தப்படம் பேசும்.

நாயகி துஷாரா பேசியதாவது:
‘நட்சத்திரம் நகர்கிறது’ மிகவும் நேசித்து நடித்த படம், மாரியம்மா வாக எனக்கு லைஃப் தந்தவர் ரஞ்சித் சார். ரெனே மூலம் அது தொடருமென நம்புகி றேன்..எல்லோரும் கடுமையாக உழைத் திருக்கிறோம். படம் பாருங்கள்.

நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசியதாவது:
என்னாலேயே இத நம்ப முடியல. விஸ்காம் படிக்கும்போது மெட்ராஸ் படம் பார்த்துட்டு ரஞ்சித் சார் நம்பர் கண்டுபிடிச்சு பேசினேன். அவருக்கு நான் யாருனு கூட தெரியாது. ஆனா ரொம்ப நேரம் படம் பத்தி பேசினாரு. அவர் படத்துல நடிப்பேன்னு கனவுல கூட நினைக்கல. ரொம்ப சந்தோசமா இருக்கு. ரஞ்சித் சாருக்கு நன்றி. படத்துல என்னோட பேர் இனியன் இந்த கதாப் பாத்திரம் என்னோட ரியல் லைஃப் மாதிரி தான் எல்லோருக்கும் பிடிக்கும்.

கலையரசன் பேசியதாவது:
படத்துல என்னோட பேர் அர்ஜூன், ரொம்ப முக்கியமான பாத்திரம் எல்லோரும் திட்டிட்டே நடிச்சிருக் காங்க.  நிஜத்த கேள்வி கேக்கற ஒரு பாத்திரம். ரஞ்சித் கதை எழுதுறதும், அதை படமாக்கறதும் ரொம்ப வித்தியாசமா இருக்கும். இந்தப்படம் காதல கொண்டாடும்.

இசையமைப்பாளர் தென்மா பேசியதாவது:
சுயாதீன இசையமைப்பில் 15 வருடங்களாக இருக்கேன்.  ரஞ்சித் சார் சந்தித்த பிறகு வாழ்க்கை மாறிவிட்டது. இது எனது நாலாவது படம் ஆனால் ரஞ்சித் சார் எனக்கு பெரிய அறிமுகம் கொடுத்து விட்டார். அவர் நிறைய பேருக்கு அறிமுகம் தந்துள்ளார். பாடகர் அறிவு மெயின் ஸ்ட்ரீமில் கொண்டாடப்படுவது அவரால் தான். என் இசையே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அது எல்லோ ருக்கும் பிடிக்காது. ஆனால் ரஞ்சித் சார் தான் ஊக்கப்படுத் தினார். நிறைய புதுமுகங்கள் இதில் உழைத் துள்ளார்கள்.

இயக்குநர் சசி பேசியதாவது
சிலர் பார்க்க ஆஜானு பாகுவாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் செயல்கள் கோழைத் தனமாக இருக்கும்.  ஆனால் அப்படியான வரில்லை ரஞ்சித் துணிச்சலாக எல்லாவற் றையும் செய்வார். இந்த தலைப்பே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு புத்தக தலைப்பை எப்படி தைரியமாக வைக்கிறார் என ஆச்சர்யமாக இருந்தது. யாழி பிலிம்ஸ் அவரை சுதந்திரமாக படமெடுக்க விட்டதற்கு நன்றி. ரஞ்சித் படம் எல்லாவற்றையும் பார்த்தவுடன் என் கருத்தை சொல்லிவிடு வேன். இந்தப்பட கதாப்பாத்திர அறிமுக டிரெய்லரே வித்தியாச மாக இருந்தது, அது  படம் உடனே பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இந்தப்படம் ரஞ்சித் படங்களில் முக்கியமான படமாக இருக்கும்.

இயக்குநர் வெற்றி மாறன் பேசியதாவது:
‘அட்டகத்தி’ பார்த்தபோது ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக தெரிந்தது. அதே போல் தான் இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போதும் இருந்தது. உறவுகள் பற்றி நாம் பேச தயங்குகிற விஷயத்தை, தமிழ் சினிமாவில் நிகழ்த்தும் படமாக இது இருக்கும். ரஞ்சித் மீண்டும் புது   டிரெண்டை உருவாக்கியிருக்கிறார்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது:
2007 காலகட்டத்தி லிருந்து ரஞ்சித்தை தெரியும். ஒரு டாக்கு மெண்ட்ரிக்கு ஸ்டோரி போர்ட் செய்யத்தான் வந்தார். நான் படம் செய்த போது நானே அவரை அழைத்தேன். அவர் லிங்குசாமி யிடம் தான் சேர்த்து விட சொன் னார். பாவம் என்னிடம் மாட்டிக் கொண்டார். ரஞ்சித் படங்களை பார்க்கிற போது பிரமிப்பாக இருக் கிறது. அவருக்குள் இவ்வளவு சிந்தனைகள் இத்தனை விஷயங்கள்,  குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறிவிட் டார். அவரது ஒவ்வொரு படமும் ஆச்சர்யம் தரும். இந்தப்பட டிரெய்லரே மிரட்டிவிட்டது. ஹாலிவுட் படம் போல் உள்ளது.

தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா பேசியது:
‘அட்டகத்தி’ துவக்கத்துக்கு வெங்கட் பிரபு தான் காரணம். அவர் தான் என் அஸிஸ்டெண்ட் படம் பண்ணிருக்கார் வாங்கன்னு கூட்டிப் போனார். படம் பிடித்தது. அதை விட ரஞ்சித் பிடித்துப் போனார். அவரோடு அப்போது துவங்கிய பயணம்,  மெட்ராஸ் இப்போது விக்ரம் வைத்து படம் பண்ணுவது வரை தொடர்கிறது. ஒரு மனிதனாக ரஞ்சித் பல திறமையாளர்களை வளர்த்து விட்டுள்ளார். அவர் செய்வதெல் லாம் ஆச்சர்யமாக இருக்கிறது. புக் வெளியிடு கிறார், கேஸ்ட்லெஸ் கலக்டிவ் நடத்தி வருகி றார். தான் கொண்ட கொள்கையில் சிறிதும் தடம் மாறாமல் பயணித்து வருகி றார். அவருடன் இணைந்து பயணிப்பது பெருமையாக இருக்கிறது.

கலைப்புலி தாணு பேசியதாவது:
ரஞ்சித் தனக்கு இருக்கும் நட்புக் களை ஒன்று சேர்த்து பயணிப்ன பவர். கபாலியில் பயணிக்கும் போது அவரது எண்ணங் களை பகிர்ந்துகொள்வார். அவருக்கு எப்போதும் நான் துணை நிற்பேன். பரியேறும் பெருமாள் படத்திற்கு தியேட்டர் கிடைக்காதபோது அவருக்கு தெரியாமலேயே தியேட்டர் கிடைக்க ஏற்பாடு செய்தேன். அவரது பாணியில் இருந்து விலகி, ஹைஃபையாக நட்சத்திரம் நகர்கிறது செய்து கொண்டிருக் கிறார். உண்மையில் இந்த படைப்பு அடித்தட்டு மக்களின் கதையை சொல்லும்.

யாழி ஃபிலிம்ஸ் தயாரிப் பாளர் மனோஜ் பேசியதாவது:
குதிரைவால் படத்திற்கு கோ புரடியூசர் தேடும் போது தான் ரஞ்சித் உடன் நெருங்கி பழகி னோம். அவர் செய்து வரும் விஷயங்கள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது. யாழி ஃபிலிம்ஸில் இந்தப் படத்தை செய்யலாம் என்றபோது யாழி ஃபிலிம்ஸ்க்கு இந்தப் படம் சரியாக இருக்கு மென்று நினைத்தோம். இந்தப்படம் கதை யாகவே நிறைய ஆச்சர்யங்கள் இருந்தது, படமும் நன்றாக வந்துள்ளது. நீலம் புரடக்ஷன்ஸ் பெரிய உதவியாக இருந்தது. அடுத்து பொம்மை நாயகி படமும் நீலமுடன் இணைந்து செய்து வருகிறோம். இன்னும் நிறைய படைப்புகள் திட்டமிட்டிருக்கிறோம். இந்தப்படத்தின் வரவேற்பை பார்க்க ஆவலுடன் உள்ளோம்.

Related posts

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு தினசரி நாளிதழ் சங்கம் வாழ்த்து..

Jai Chandran

இளையராஜா பிறந்த நாள்: கமல்-திரைப்பட குழு வாழ்த்து

Jai Chandran

வார் 2 படத்தில் ஹிருத்திக் காஸ்டியூம் ஸ்டைல் – அனைதா ஷ்ராஃப்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend