சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் சில வருடங்களுக்கு முன் சுவாதி என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பபரபரப்பான வழக்காக நடந்தது.
சுவாதி கொலை வழக்கு என்ற நுங்கம்பாக்கம் என்னும் பெயரில் திரைப்படம் இயக்கி தயாரித்தார் திரைப் பட கல்லூரி மாணவர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் அப்படம் ரிலீஸுக்கு தடை விதிக்கப்பட்டது.தற்போது தடை நீங்கி ரிலீஸ் ஆக உள்ளது.
இதுபற்றி இயக்குனர் ரமேஷ் செல்வன் வெளி யிட்ட அறிக்கை:
“சுவாதி கொலை வழக்கு” என்ற நுங்கம் பாக்கம் திரைப்படம் இரண்டு வருட போராட்டத்திற்கு பின் திருமாவளவன் படம் பார்த்துவிட்டு வெளியிட சம்மதம் தெரிவித்தது மட்டுமில்லாமல் பாதிக்கப் பட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் செயலாளர் பாலாஜி ஆகியோருக்கும் படத்தை காண்பித்து சம்மதம் பெறப்பட்டது. மேலும் ராம்குமார் தந்தை தொடர்ந்த வழக்கு மற்றும் இதர வழக்குகள் அனைத்தையும். சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தடையை நீக்கியது. இறுதியாக இப்படம் அடுத்த மாதம் பிரபல OTT நிறுவனத்தின் மூலம் வெளியிடப் படுகிறது.
இவ்வாறு இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் தெரிவித்திருக்கிறார்.
’சுவாதி கொலை வழக்கு’ நுங்கப்பாக்கம் படத்தில் ஹைரா மற்றும் மனோ முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.