Trending Cinemas Now
விமர்சனம்

கர்ணன் (பட விமர்சனம்)

படம்: கர்ணன்
நடிப்பு: தனுஷ், லால், யோகி பாபு, நட்ராஜ், ரஜிஷா விஜயன், கவுரி கிஷன், லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமவுலி, ஜி.எம்.குமார்
தயாரிப்பு: வி கிரியேஷன் கலைப்புலி எஸ். தாணு
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு:தேனி ஈஸ்வர்
இயக்கம்: மாரி செல்வராஜ்
திருநெல்வேலி அருகில் நெடுசாலையையொட்டிய பகுதியில் பொடியன்குளம் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அந்த ஊர்க்காரர்கள் வெளியூருக்கு பஸ்ஸில் செல்ல வேண்டு மென்றால் பக்கத்து ஊர் பஸ் ஸ்டாபிற்கு சென்றுதான் ஏற வேண்டும். ஆனால் அந்த ஊர்க்காரர்கள் பொடியன் குளம் ஆட்களை பார்த்தாலே வம்புக்கு இழுப்பது வழக்கம். பொடியன்குளம் மக்களின் விடிவெள்ளியாக திகழ்கிறான் இளைஞன் கர்ணன். எதையும் தட்டிக்கேட்கிறான். எந்நேரமும் லாலுடன் சுற்றி வரும் கர்ணன் ஒரு கட்டத்தில் தன் ஊர் மக்கள் மீது நடக்கும் தாக்குதலை தட்டிக்கேட் கிறான். ஊரில் நிற்காத பஸ்ஸை அடித்து நொறுக்கு கிறான். அதை வைத்து கர்ணனை தேடி வருகிறது போலீஸ். ஊர் பெரியவர்கள் சிலர் பொறுப்பேற்றுக் கொண்டு போலீஸ் நிலையம் செல்கின்றனர். போலீஸார் பெரியவர்களை தாக்குகின் றனர். அவர்களை தேடி செல்லும் கர்ணனும் இன்னும் சில இளைஞர்களும் போலீஸ் நிலையத்தை அடித்து துவம்சம் செய்து காயம் அடைந்து கிடந்த பெரியவர் களை மீட்டு வருகின்றனர். போலீஸையும், போலீஸ் நிலையத்தையும் தாக்கியவர் களை கைது செய்ய போலீஸ் படை ஆயுதங்களுடன் அந்த ஊருக்கு வருகின்றது. இதற்கிடையில் கர்ணனுக்கு ராணுவத்தில் வேலை கிடைக்க அதில் சென்று சேரச்சொல்லி ஊரே சேர்ந்து கர்ணனை அனுப்பி வைக்கி றது. இதற்கிடையில் போலீ ஸார் ஊருக்குள் புகுந்து ஊரையே அடித்து நொறுக்கு கின்றனர். ஊர்க்காரர்களை ஆபத்தில் விட்டு செல்கிறோ மோ என்ற சஞ்சலத்துடன் இருக்கும் கர்ணன் ஊருக்கு திரும்பிவர போலீஸார் நடத்திய அராஜகத்தை பார்த்து கொதித்தெழுகிறான். அவர் களை வெட்டி வீழ்த்துகிறான். இதன் முடிவில் ஊர் மக்களின் எண்ணம் நிறைவேறுகிறதா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.


ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்கு உரக்க குரல்கொ டுக்கிறான் கர்ணன். தண்ணீர் எந்த நிலத்தில் விழுகிறதோ அதன் தன்மைக்கு மாறிவிடு வது போல் கர்ணன் கதாபாத் திரமாகவே மாறி இருக்கிறார் தனுஷ்.
ஊரில் சக இளைஞர்களில் ஒருவராக இருந்தாலும் அடங் காத கோபமும், இன மக்கள் மீதான பற்றால் எழும் ஆவேசமும் எதிரில் நிற்பது அரசாங்கமே என்றபோதும் நெஞ்சை நிமிர்த்தி பேசும் துணிச்சலால் கர்ணன் கதாபாத் திரத்துக்கு உயிர் கொடுத்திருக் கிறார் தனுஷ் .
ஊர் இளைஞர்கள் சாமிக்கு படைக்கும் மீனை வெட்ட பயப்படும் நிலையில் வாள் எடுத்து பறந்து வந்து மீனை ஒரே வெட்டில் இரண்டு துண்டாக்கிவிட்டு யானை மீது சவாரி ஏறும் தனுஷ் முதல் காட்சியிலேயே இவர் எதையும் சாதிப்பவர் என்று அச்சாரமிடுகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
தன் ஊர் பெண்ணையும் அவளது தந்தையையும் தாக்கிய பக்கத்து ஊர் முரடர் களை மாடுகளை குறுக்கே விட்டு வழிமடக்கி தாக்கும் போதும், கபடி போட்டியில் தான் அவுட் செய்தவரை வெளியே அனுப்ப மறுக்கும் நடுவரை சட்டையை பிடித்து உலுக்கி நியாயம் கேட்பதிலும் அனல் பறக்கிறது.
அநியாயத்தை கண்டு கொதிப் பவனும் அதற்கு எதிராக போராடுபவனும் தலைவன் ஆகிறான் இதில் தனுஷ் தலைவன் ஆகியிருக்கிறார். அம்மா திட்டும் திட்டை பொறுக்க முடியாமல் வாளை எடுத்துக்கொண்டு விறகு வெட்ட செல்கிறேன் என்று முரண்டு செய்வதும், லாலுடன் சேர்ந்து காசு சுண்டி விட்டு பந்தயம் ஆடுவதுமாக சிறுபிள்ளை விளையாட்டு செய்யும் தனுஷ் தன்னுடைய ரோஷத்தை யாராவது சீண்டி பார்த்தால் புலியாக மாறி தாக்குவது அபாரம்.

விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு சென்ற ஊர்க் காரர்கள் தாக்கப்பட்டார்கள் என்று தெரிந்தவுடன் வேங்கை யாக பாய்ந்து சென்று போலீ ஸாரையும் போலீஸ் நிலையத் தையும் அடித்து துவம்சம் செய்து அதிர வைக்கிறார்.


ஊரையே தாக்க போலீஸ் பட்டாளம் வரும் என்று உணர்ந்து ஊர்க்காரர்களை போராளியாக்கும் தனுஷின் வசனத்தில் உணர்ச்சி பெருக் கெடுக்கிறது. எத்தனை தலைமுறை மாறிவிட்டது இன்னும் இந்த அவலம் மாறவில்லை போலீஸ் வந்தாலும், ராணுவமே வந்தாலும் எதிர்த்து நிற்பேன் என்று சொல்லும் தனுஷ் ஒரு போராளியாக உயர்கிறார்.
ஊருக்குள் புகுந்து மக்களை அடித்து நொறுக்கும் போலீ ஸாரை வாளால் வெட்டி சாய்ப்பதும் எல்லா அரஜகத் துக்கும் காரணமாக இருக்கும் நட்ராஜை தனி அறைக்குள் இழுத்துச் சென்று தாக்குதல் நடத்தி கொல்வதுமாக ஒரு போர்களத்துக்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்படுத்துகி றார்.
தனுஷை விழுங்கிவிடுவது போல் கண்ணால் காதல் வலை வீசும் ரஜிஷா, தனுஷை தாங்கும் நேரத்தில் தாங்கியும் ஏசும் நேரத்தி ஏச்சியும் நிஜ அக்கவாக மாறிய லட்சுமியும், படிக்க முடியாவிட்டாலும் ஊர்காரர்கள் சண்டையில் லாமல் இருக்கட்டும் என்று அமைதிகாக்கும் கவுரி போன்று பல கதாபாத்திரங்கள் ஊரில் வாழும் அங்கத்தினர் களாகி இருக்கின்றனர். யோகிபாபுக்கு இப்படியொரு பாத்திரம் கிடைத்திருப்பதும் அதை சிரிப்ப பாத்திரமாக்கி விடாமல் மனதை உருக்கும் பாத்திரமாக்கி ஸ்கோர் செய்கிறார்.
தனுஷுடனே தோழனுக்கு தோழனாக ஆசானுக்கு ஆசானாக தோள்கொடுக்கும் லால் இன்னொரு தூணாக படத்தை தாங்கி நிற்கிறார். போலீஸ் அதிகாரி நட்ராஜ் எதிர்பாராத வில்லனாகி அராத்து செய்திருக்கிறார்.
பரியேறும் பெருமாள் படத்தில் விளக்கு சுடராக பரவ விட்ட தீண்டாமை தீயை கர்ணன் மூலம் தீப்பந்தமாக்கி ஊரையே விழிக்க வைத்திருக் கிறார் மாரி செல்வராஜ். இத்தனை ஆண்டுக்கு பிறகு இன்னுமா இப்படி கொடுமை கள் நடக்கிறது என்று கேட்டால் அதற்கு இல்லை என்று பதில் சொல்லிவிட முடியாது. இன்றைக்கு திரும்பிக்கொண் டிருக்கும் அப்படியொரு சூழலை மாற்ற அம்பேத்கர் இல்லை என்றாலும் அவரது வளர்ப்பு கள் எல்லா பக்கமும் கிளை விரித்து பரந்திருக்கிறார்கள் என்பதற்கு இதுபோன்ற படங்கள் உதாரணம். சினிமாவில் அதன் பிரதி பலிப்பு அழுத்தமாக பதிவாகிக்கொண்ருக்கிறது. அதிலொரு சமீபத்திய பதிவு கர்ணன்.


கேள்விகள் கேட்டல்தான் நியாயம் கிடைக்கும் கர்ணன் மூலமாக இயக்குனர் மாரி செல்வராஜ் கேள்வி கேட்டிருக் கிறார்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு ஒரு காட்சியைக்கூட சினிமாத் தனமாக்காமல் மண்ணின் மணம், மனத்தின் மணமும் வெளிப்படும் விதமாக காட்சி களை படமாக்கியிருக்கிறார்.
சில சமயம் இசை ஆரவாரமாக இருந்தால் பாடல் வரிகள் கேட்காது, வரிகள் ஆரவார மாக இருந்தால் இசை கேட் காது. இதில் இரண்டுக்குமே சமபங்கு கொடுத்து ரத்தத்தை சூடேற்றுகிறார் இசை அமைப் பாளர் சந்தோஷ் நாராயணன்.
கண்டா வரச் சொல்லுங்க, வுட்றாதீங்க யப்போ, மஞ்சனத்தி புராணம், தட்டான் தட்டான் என 4 பாடல்களும் நான்கு திசைகள்போல் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக வுட்றாதீங்க யப்போ நரம்புகளை புடைக்கச் செய்கிறது.
கர்ணன் – அநியாத்தை கண்டால் இனி எல்லோரும் கர்ணனாக மாறுவார்கள்.

Related posts

ஒ மை டாக் (பட விமர்சனம்)

Jai Chandran

பாம்பாட்டம் ( பட விமர்சனம்)

Jai Chandran

பேய காணோம் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend