உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதிக்கு கமல் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில் கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதிக்கு மய்யத்தின் வாழ்த்துகள். 74நாட்கள் என்ற குறுகிய பதவிக்காலத்தில், தமிழகத்தின் நெடுங்காலக் கோரிக்கையான உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான முன்னெடுப் பைச் செய்துதர வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுக்கிறது.
மேலும், தற்போது நாடெங்கும் நிலுவையில் உள்ள 5 கோடி வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கான வழிமுறைகளை வகுத்துத் தருவதோடு, அனைத்து நீதிமன்ற விசாரணைகளுக்கும் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு தரப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு மய்யம் கோரிக்கை விடுக்கிறது.
#MNM4Justice
