” கடமையைச் செய் ” படக்குழு சார்பில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கொரோனோ நிதி வழங்கியது.
எஸ்.ஜே. சூர்யா, யாஷிகா ஆனந்த் நடிப்பில் வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ” கடமையைச் செய் ” படத்தின் தயாரிப்பாளர் ஜாகிர் உசேன் மற்றும் டி.ஆர் ரமேஷ் ஆகியோர் ரூபாய் 10 லட்சத்தை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கொரோனோ நிதியாக வழங்கியுள்ளனர்.
இந்த பெரும் தொற்று காலத்தில் நலிந்த தயாரிப்பாளர்களை காக்கவே இது போன்று அனைவரும் உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள்.