Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் ராசி அழகப்பன் ஆங்கில கவிதை நூல் வெளியீடு

புதுச்சேரி, நேருவீதி இந்தியன் குளம்பியகத்தில் தமிழக அரசு விருதுபெற்ற திரைப்பட இயக்குநர் கவிஞர் ராசி.அழகப்பனின்  “தாய்மண்ணின் ஈரம்” (MOISTURE OF MOTHERLAND) என்ற (ஆங்கிலக் கவிதை நூல்    இன்று அக்டோபர் 28)  முற்பகல் வெளியிடப்பட்டது.
தாகூர் கலைக் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் நா.இளங்கோ நூலினை வெளியிட புதுச்சேரிக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வீர.பாலகிருஷ் ணன் முதல் நூலினைப் பெற்றுக் கொண்டார்.
விழாவின் வரவேற்புரையினை தமிழாசிரியர் சின்ன.சேகர்,  நன்றியுரையினை பாவலர் குமாரவேறு  வழங்கினார்கள். பொறிஞர் இரா.தேவதாசு நூல் அறிமுகவுரை ஆற்றினார். பாவலர் தமிழ்நெஞ்சன், பாவலர் சொற்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் ராசி.அழகப்பன் ஏற்புரை வழங்கினார்.
நூல் வெளியீட்டில் ஓய்வு பெற்ற தொழிற்சங்க செயலர் புகழேந்தி , கவிஞர் ஞானமோகன் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்

Related posts

“வெள்ளகுதிர” இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு

Jai Chandran

அரசியல் பாதிப்பால் ’கோடியில் ஒருவன்’ விஜய் ஆண்டனி எடுக்கும் அதிரடி முடிவு..

Jai Chandran

ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்: 10 மொழியில் ரிலீசாகிறது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend