விக்ரம் நடித்த சேது, விஷால் ஆர்யா நடித்த அவன் இவன், விக்ரம் சூர்யா நடித்த பிதாமகன் போன்ற பல வெற்றிப்படங்களை அளித்தவர் இயக்குனர் பாலா. இவர் பல படங்களை தயாரித்திருக்கிறார். தற்போது மீண்டும் பாலா – சூர்யா கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளது.
இயக்குனர் பாலாவுக்கு முத்துமலர் என்பவருடன் கடந்த 2004ம் ஆண்டு மதுரையில் திருமணம் நடந்தது. கடந்த 14 வருடமாக இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். கடந்த 4 வருடங்களாக பிரிந்திருந்த நிலையில், தற்போது இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்தார்கள்.
இந்த தகவல் வெளியானதும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர்
