தமிழக ஐஏ எஸ் அதிகாரியக் இருந்தவர் சந்தோஷ் பாபு, டாக்டருக்கு படித்த இவர் பின்னர் ஐஏ எஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராகவும், தமிழக பைபர் நெட் கழக தலைவராகவும் இருந்தார். அப்போது டெண்டர் விடும் விவகாரத்தில், தமிழக அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து சந்தோஷ் பாபு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேளச்சேரி தொகுதியை கட்சி ஒதுக்கி கட்சி அறிவித்தது. அத்தொகுதியில் வாக்கு சேகரிப்பில் பரபரபப்பாக இயங்கி வந்த சந்தோஷ்பாபு நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சந்தோஷ்பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் பிரசாரத்துக்கு அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரிடம் வேட்புமனு பெற்ற அதிகாரியும் அதிர்சி அடைந்துள்ளார்.