பிரபல நடிகர் கார்த்திக்கு இன்று பிறந்தநாள். கொரோனா காலகட்டத்தில் ரசிகர்கள் தனக்கு இப்படியொரு பிறந்தநாள் பரிசு தரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுபற்றி கார்த்தி கூறியதாவது:
அன்பு தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்!
இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிக்க க்டுமையாக உள்ளது. அரசாங்கமும் மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள.மாஸ்க் அணிதல். சானிடைசர பயன்படுத்தல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் வசிப்பிடட்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைக்ஃஅளை தவறாமல் பின்பற்றி தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் இதுவே இந்தப் பிறந்தாநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்.
இவ்வாறு ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.