Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

’மக்களுக்கு இதயம் கனிந்த நன்றி’ ஐஸ்வர்யாராய் நெகிழ்ச்சி மெசேஜ்..

இந்தி நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், மற்றும் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். ஐஸ்வர்யாரா ஆராத்யா குணம் அடைந்து வீடு திரும்பினர்.

இதுகுறித்து ஐஸ்வர்யாராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையெடுத்து கும்பிட்டு உருக்கமான மெசேஜ் பதிவிட்டிருக்கிறார். அதில்,’என் டார்லிங், தேவதை ஆராத்யா, பா (அமிதாப்), அபி (அபிஷேக்) மற்றும் நான் குணம் அடைய அன்பு, பிரார்த்தனை, வாழ்த்துகள் சொன்ன மக்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றி. நீங்கள் காட்டிய அன்பின் மிகுதியில் நான் மிகவும் உணர்ச்சிவசத்தில் ஆழ்ந்தேன். அனைவருக்கும் நான் நன்றிக் கடன்பட் டிருக்கிறேன். நீங்கள் நலமுடன் இருக்க என் அன்பும் பிராத்தனையும் இருக்கும். எல்லோரும் நலமுடன். பாதுகாப்பாக இருங்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக் கட்டும்.
இவ்வாறு ஐஸ்வர்யாராய் தெரிவித்துள்ளார்.

Related posts

கி.ரா எழுதிய நாவல் சினிமாவான கதை:இ.வி.கணேஷ்பாபு விளக்கம்

Jai Chandran

எழில் இயக்கத்தில் விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா 2

Jai Chandran

STR launches trailer of Love Today

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend