படம்: தடை அதை உடை
நடிப்பு: மகேஷ், திருக்குறள் குணா பாபு , கேஎம்..பாரிவள்ளல் திருவாரூர் கணேஷ் , மஹாதீர் முகமது,
நாகராஜ், டெல்டா சரவணன்,
ஆம்பல் சதீஷ், எம்கே.ராதாகிருஷ்ணன்,
வேல்முருகன, காத்து கருப்பு கலை,
பாக்கியம் கௌதமி,
சுபாஶ்ரீ,
சூரியப்ரதாபன்
இசை: சாய் சுந்தர்
ஒளிப்பதிவு:
தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன்
தயாரிப்பு இயக்கம்: அறிவழகன் முருகேசன்
பி ஆர் ஓ: புவன் செல்வராஜ்
குணா பாபு மற்றும் நண்பர்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரை சந்தித்து 3 கதை சொல்கிறார்கள். 3 கதைகளில் ஒரு கதையை தயாரிப்பாளர் தேர்வு செய்து வாய்ப்புத் தருகிறாரா? 3 கதைகள் என்ன என்பதுதான் படம்.
கொத்தடிமையாக இருக்கும் பாரிவள்ளல் தன் மகனை படிக்க வைக்க போராடுகிறார். அதற்காக அவர் தன் மகனை அழைத்துக் கொண்டு குறுக்கு வழியில் தப்பி ஓடுவதும், தன் உயிர் போனாலும் மகன் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று போராடுவது படபடப்பை ஏற்படுத்துகிறது.
யூடியூப் சேனல் தொடங்கி வில்லனின் கோபத்துக்குள்ளாகும் குணா பாபு மற்றும் நண்பர்கள் பின்னர் தன் அக்காள் யூ ட்யூப் சேனலில் வந்த கமெண்ட் பார்த்து தீக்குளிப்பதும் அதற்கு அங்காடி தெரு மகேஷ் கமெண்ட் போட்ட நபரை கோபத்தில் தேடி அலைவதும் சோசியல் மீடியாவின் பாதிப்பை நறுக்கென எடுத்துக் காட்டுகிறது.
சாய் சுந்தர் இசை அமைக்க தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் அறிவழகன் முருகேசன். சமூகத்துக்கு ஒரு கருத்தை சொல்ல முற்பட்டிருக்கிறார். திரைக்கதையில் மாற்றம் செய்து கருத்தை சினிமாத்தனமாக இல்லாமல் இயக்கியிருந்தால்
சுவாரஸ்யம் கூடியிருக்கும்
தடை அதை உடை – பி அண்ட் சி படம்

Review By
K Jayachandhiran
trendingcinemasnow.com
