Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேனி மாணவர் உடல் உறுப்பு தானம்: மக்கள் நீதி மய்யம்

விபத்தில் மரணம் அடைந்த தேனி மாணவர் உடல் உறுப்புதானம் செய்த. பெற்றோருக்கு கமலின் மக்கள் நீதி மய்யம் உருக்கம் தெரிவித்துள்ளது.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தேனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சக்திகுமாரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷின் உடல் உறுப்புகளும் தானம் செய்யப்பட்டுள்ளன.

இளம் வயதில் பிள்ளையைப் பறிகொடுத்த சோகத்தின் மத்தியிலும் உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வந்த பெற்றோர்களின் கருணையும், ஈகையும், அந்த திடமனதும் போற்றுதலுக்குரியவை. மற்றவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த தியாகத் திருவுள்ளங்களை மக்கள் நீதி மய்யம் வணங்குகிறது.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் கல்லூரி மாணவர்கள் விபத்தில் தங்கள் இன்னுயிரை இழப்பது தமிழகத்தின் அன்றாட நிகழ்வாகி விட்டது. வாகனம் ஓட்டும் மாணவர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றினாலே பாதி விபத்துகள் குறைய வாய்ப்பிருக்கிறது. மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து விபத்துகளைக் கட்டுப்படுத்துவது குறித்த செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.

Related posts

திலீப்குமார் மறைவுக்கு வைஜயந்தி மாலா வீடியோவில் இரங்கல்

Jai Chandran

காதலின் மகிழ்ச்சி – வலியாக இசை ஆல்பம் பட்டி

Jai Chandran

Vennilavum Ponninadhiyum drops tomorrow at 8️⃣ PM!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend