ஆர்டர்லி காவலர்களை திரும்ப பெற ஐகோர்ட் தீர்ப்புக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். அவர் கூறியதாவது:
காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் `ஆர்டர்லி’ என்ற பெயரில் பணிபுரியும் காவலர்களை திரும்பப்பெற வேண்டுமென உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது வரவேற்கத்தக்கது.
படித்து, பயிற்சி பெற்ற காவலர்களை அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்துவது குற்றம் என்றும், இவ்வாறு பயன்படுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதேபோல, வெவ்வேறு இடங்களில், தனிப்பட்ட காரணங்களுக்காக காவலர்கள் பயன்படுத்தப்படுவதையும் முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.
