‘பெண்குயின்’ நடிகை கீர்த்தி பேசுகிறார்..
தேசிய திரைப்பட விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் ‘பெண்குயின்’ படத்தில் ஏற்றிருக்கிறார்.புது இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கம். சந்தோஷ் நாராயணன் இசை
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்க கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் பேஷன் ஸ்டுடி யோஸ் சுதன் சுந்தரம், ஜெயராம் தயாரித்திருக் கின்றனர்.
பெண்குயின் படத்தில் நடித்தது பற்றி கீர்த்தி கூறியதாவது:
நிறைய படைகளில் நான் பணியாற்றி இருந்தாலும் பெண்குயின் மிகவும் சுவாரசியமான சிறந்த படமாக இருக்கும்.
‘ரிதம்’, ஒரு தாயாக, மென்மையா னவளாக, அக்கறை உள்ளவளாக, ஆனால், துணிச்சலான பெண்மணி. அவள் குழப்பமானவள், ஆனால் உறுதியானவள். இந்தக் கதாபாத்திரம் ரசிகர் களை மிகவும் கவரும். கதைக்கு உயிர் கொடுக்கும் இயக்கு னரான ஈஸ்வர் கார்த்திக்குடன் பணியாற்றியது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. உலகெங்கிலும் பார்வை யாளர்களால் பாராட்டப்படும் ஒரு படத்தை தமிழ், தெலுங்கில் பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கும். உலக அளவில் வளர்ந்து வரும் பிரைம் வீடியோ நிறுவனத் துடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக் கிறது.
இவ்வாறு கீர்த்திசுரேஷ் கூறினார்.
அமேசான் பிரைம் வீடியோ வில் ஜுன் 19 அன்று பிரத்யேக உலக பிரிமீய ருக்காக தமிழ், தெலுங்கில் நேரடியாகவும் மற்றும் மலை யாளத்தில் டப்பிங் செய்யப் பட்டுஉலக அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்க்க லாம்.
அமேசான் பிரைம் வீடியோ உலக அளவில் ஐந்து மொழிகளில் வெளியிடும் 7 படங்களின் வரிசையில் மூன்றாவதாக வெளியாக உள்ள படம் பெண்குயின்.