இந்தியா சுந்திரம் அடைந்து 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. சிறப்பு வாய்ந்த இந்நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்க கடந்த சில வாரங்களுக்கு முன் உத்தரவிட்டார். அதற்கான இடம் சென்னை நேப்பியர் பூங்கா அருகே தேர்வு செய்யப்பட்டது.

முதல்வர் உத்தரவின்பேரில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வந்தன. நினைவுத்தூணில் 5 அடி உயரத்தில் 4 தலையுடன் கூடிய சிங்க முகம், 8 அடி உயர அசோக சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் சிலைகள் நினைவு தூணில் அமைக்கப்பட்டுள்ளது.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் அமைச்சர் மு. க ஸ்டாலின் நினைவுத்தூணை இன்று திறந்து வைத்தார்.
