தமிழகத்தில் 8 டாக்டருக்கு கொரோனா பாதிப்பு..
தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் இன்று அளித்த பேட்டி :
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக் கைகள் தமிழகத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை வீட்டுக் கண்காணிப்பிலும் 39,041, 162 பேர்கள் அரசுக் கண்காணிப்பிலும் உள்ளனர்.
தமிழகத்தில் தினமும் 2,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன 10,655 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டிருக் கிறது. 1,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இன்றைக்கு மேலும்.106 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் புதிதாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு பீலா ராஜேஷ் கூறினார்.
இந்நிலையில் 2 அரசு டாக்டர்கள், 2 ரயில்வே மருத்துவமனை டாக்டர்கள் . 4 தனியார் டாக்டர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இருக்கின் றனர் செவிலியர்கள் 5 பேர்களும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
#Tamil Nadu:8 Doctors corona infected
#Beela Rajesh