Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் மாற்றுத் திறனாளி மாணவி சாதனை !

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் பார்வை மாற்றுத் திறனாளி மாணவி ஓவியா சாதனை !

முன்னுதாரணமான கண்மணிக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு !

கோயம்புத்தூரில் பயிலும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளி மாணவி ஓவியா, தமிழகத்தில் முதல்முறையாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை மடிக்கணினியில் எழுதி, 91.40 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். உதவியாளர் இல்லாமலேயே அவர் இந்த அபார சாதனையைப் புரிந்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வெகுவாகப் பாராட்டுகிறது.

சிறிய பிரச்சினைகளுக்கும் தவறான முடிவெடுப்பது, ஆசிரியர்களையே தாக்குவது என கவலைக்குரிய செய்திகள் அணிவகுக்கும் துயர்மிக்க சூழலில், ஓவியாவைப் போன்றவர்கள் ஆறுதலைத் தருகிறார்கள்.

மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் சாதனைபுரிந்த ஓவியாவை முன்னுதாரணமாகப் பின்பற்ற மாணவர்கள் முன்வர வேண்டும்.

Related posts

பிளாஸ்டிக்  ஒழிப்பை ஊக்கிவிக்கும் விஜய் மக்கள் இயக்கம்

Jai Chandran

கூழாங்கல் பெற்றுத் தந்த பெருமை: விக்னேஷ் சிவன் பேச்சு

Jai Chandran

தீராக் காதல் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend