தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் உள்ள வி சாலையில் அக்டோபர் 27ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்கான மேடை அமைக்கும் பணி இருக்கை
வசதிகள் மற்றும் வாகன நிறுத்த வசதிகள் போன்றவை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து விஜய் ரசிகர்கள் திரண்டு வந்து மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டிற்கு வரும் ரசிகர்கள் கட்சி தொண்டர்களுக்கு விஜய் ஒரு அறிவுரை வழங்கி இருக்கிறார். அதில் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும், முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள சிறுவர்கள் மாநாட்டுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். எதற்காக விஜய் அவ்வாறு கூறியிருக்கிறார் என்பதை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை தெரிவிக்கிறது. அது வருமாறு:
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மாநாட்டுப் பணிகளுக்கான குழுக் களும் தொகுதிப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கை திருவிழாவின் ஏற்பாடு களில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும்.
அரசியலை, வெற்றி- தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண் டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள்
மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். அரசியல் களத்தில். வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான
தாய்மொழி. மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
உற்சாகமும் உண்மை யான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப் போகும் அந்தத் தருணங் களுக்காகவே. என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது.
இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும். இந்த நெகிழ்வான நேரத்தில். முக்கியமான ஒரு வேண்டு கோளை வைக்க விரும்புகிறேன். கழகத் தோழர்கள் எல்லோரையும
போலவே கர்ப்பிணிப் பெண்கள். பள்ளிச் சிறுவர் சிறுமியர். நீண்ட காலமாக உடல்நல மின்றி இருப்பவர்கள். முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்துநம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர்.
அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும்விட
அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதி யாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண் டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக. தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழா வில் கலந்து கொள்ள லாம் என்றும் அவர்க ளைக் கேட்டுக்கொள்கி றேன்.
மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும். மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல. பயண வழிகளில் அரசியல் ஒழுங்கை
நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை. கண்ணியம்,
கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல் பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தி யாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் கட்டுப்பாட் டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தி யாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர் களுக்கு எடுத்துக்காட் டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப் பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்..
இவ்வாறு விஜய் அறிக்கையில்.கூறியுள்ளார்.
