Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் Vs  விஜய்சேதுபதி  800 பட சர்ச்சைக்கு நடிகர் நன்றி வணக்கம் சொல்லி விலகல்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க் கை படமாக உருவாகிறது 800. இவர் 800 கிரிகெட்டில் 800 விகெட்டுக:ளை கைப்பர்றி சதனை படத்ததல் 800 என்ற டைட்டில் வைக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டே இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானபோது அப்போது விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கக் கூடாது.  ஈழ தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங் கை அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

எனவே அவரது வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்காமல் விலக வேண்டும் என்று தமிழ் பற்றாலர்கள் குரல் கொடுத்தனர். இதையடுத்து அந்த படத்ஹ்டிலிருந்து விஜ்ய சேதுபதி விலகிவிட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து இந்த் பிரச்னையும் முடிந்தது.

இந்நிலையில் சமீபத்தில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிபதாக அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன் துபாயில் நடந்த ஐபில் 20 / 20 கிரிகெட் மேட்ச் விலையாட்டின்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை முத்தையா முரளிதரன் வெளியிட்டார். விஜய் சேதுபதியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

 

 

அதன்பிறகு இதற்கு படுவேகமாக எதிர்ப்பு கிளம்பியது தமிழ் பற்றாலர்கள் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று பகிரங்கமாக கொரிக்கை விடுத்தனர். டிவி விவாதங்களிலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. இதில் பேசியவர்கள் விஜய் சேதுபதி நடிக்கக்குட்டது என்று ஒரு அணியும் விஜய் சேதுபதி நடிக்கலாம் கருவிலேயே படடைப்பை அழிக்கக் கூடாது என்று காரசாரமாக மோதிக்கொண்டார்கள்.  அதேபோல் திரையுலகமும் இரண்டுபட்டு நின்றது.

இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் பார்த்திபன் . கவிஞர் தாமரை, டைரக்டர் சீனு ராமசாமி உள்ளிட்ட பலரும் தமிழ் ஆர்வலர்களும் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால்  800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை தடுப்பது முறையல்ல என சமக நிறுவன  தலைவர் சரத்குமார், திரைப்பட  இயக்குனர் பேரரசு உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இதனால் விஜய் சேதுபதி 800 படத்தில் நடிப்பதா வேண்டாமா என்று குழப்பத் தில் இருந்து வந்தார், தனது நண்பர்களிடமும் ஆலோசித் தார். இந்த குழப்பங்களை அறிந்த முத்தையா முரளிதரன் தான் ஈழ் தம்ழ்ர்களுக்கு செயல்பட வில்லை என்று 3 பக்க அறிக்கை வெளியிட்டார். அந்த இதோ:

 

 

 

 

தந்து வேடத்தை விஜய் சேதுதி ஏற்றதற்கு முத்தையாமுரளிதரன்  3 பக்கத்துக்கு விளக்கம் அளித்தபோதும் எதிர்ப்பு குறைந்தபாடில்லை..  800 படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தொடர்ந்த வண்ணமிருந்தது. தனது வாழ்க்கை படத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கொளம்பியதாஅல் மன வெறுத்துபோய் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டார்; அதில் விஜய் சேதுபதியை தந்து 800 படத்திலிருந்து விலகி கொள்ளுமாறு கேட்டிருந்தார். அதை ஏற்று விஜய் சேதுபதி நன்றி , வணக்கம் கூறி படத்திலிருந்து விலகினார்.

முத்தையா விஜய் சேதுபதிய விலக கேடு வெளியிட்ட அறிக்கை இதோ:

முத்தைய முரளிதரனே தனது வாழ்கை படம் 800லிருந்து விஜய் சேது பதியை விலக்கிக்கொள்ள சொல்லி அறிக்கை வெளியிட் டிருக்கிறார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:
எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ் நாட்டில்‌ சிலரால்‌ ஏற்படுத்தப் பட்டுள்ள சர்ச்சைகள்‌ காரண மாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்‌.
என்‌ மீதுள்ள தவறான புரித லால்‌ 800 படத்தில்‌ இருந்து விலக வேண்டும்‌ என நடிகர்‌ விஜய்‌ சேதுபதிக்கு சிலர்‌ தரப் பில்‌ இருந்து கடுமையான அழுத்தம்‌ தருவதை நான்‌ அறிகிறேன்‌ எனவே என்னால்‌ தமிழ்‌ நாட்டின்‌ ஒரு தலை சிறந்த கலைஞன்‌ பாதிப்படை வதை நான்‌ விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய்‌ சேதுபதியின்‌ கலை பயணத் தில்‌ வருங்காலங்களில்‌ தேவை யற்ற தடைகள்‌ ஏற்பட்டு விடக் கூடாது என்பதையும்‌ கருத்தில்‌ கொண்டு இத்திரைப்படத்தில்‌ இருந்து விலகிக்‌ கொள்ளு மாறு அவரை கேட்டுக் கொள் கிறேன்‌.
ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும்‌ தடைகளால்‌ ஒரு போதும்‌ நான்‌ சோர்ந்து விடவில்லை அதை அனைத் தையும்‌ எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால்‌ எட்ட முடிந்தது. இத்திரைப்படம்‌ எதிர்கால தலைமுறையினருக்கும்‌ இளம்‌ கிரிக்கெட்‌ வீரர்களுக்கும்‌ ஒரு, உத்வேகத்தையும்‌ மன உறுதி யையும்‌ அளிக்கும்‌ என எண்ணியே எனது சுயசரிதை யை திரைப் படமாக்க சம்மதித்தேன்‌ அதற்கும்‌ இப்போது தடைகள்‌ ஏற்பட் டிருக்கிறது . நிச்சயமாக இந்த தடைகளையும்‌ கடந்து
இந்த படைப்பை அவர்களி டத்தில்‌ கொண்டு சேர்ப்பார் கள்‌ என நம்புகிறேன்‌. இதற் கான அறிவிப்பு விரைவில்‌ வரும்‌ என தயாரிப்பு நிறு வனம்‌ என்னிடம்‌ உறுதி அளித் துள்ள நிலையில்‌ அவர் கள்‌ எடுக்கும்‌ அனைத்து முயற்சி களுக்கும்‌ உறுதுணையாக இருப்பேன்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.
இத்தகைய சூழ்நிலையில்‌ எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும்‌ அரசியல்‌ பிரமுகர்களுக்கும்‌ தமிழ்‌
திரைப்பட கலைஞர்களுக்கும்‌ விஜய்‌ சேதுபதியின்‌ ரசிகர் களுக்கும்‌ பொதுமக்களுக்கும்‌ குறிப்பாக தமிழக மக்களுக் கும்‌ எனது மனமார்ந்த
நன்றிகள்
இவ்வாறு முத்தையா முரளி தரன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.


முத்தையா முரளிதரன் அறிக்கையை தனது டிவிட் டரில் பகிர்ந்து நன்றி, வணக்கம் தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து மறைந்த முதலமைச்சரின் தாயாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் விஜய் சேதுபதி

800 படத்திலிருந்து விலகி விட்டீர்களா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன் என்று பதிலளித்தார் நன்றி வணக்கம் என்றால் முற்றுப்புள்ளி வைத்ததாக தான் அர்த்தம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இதைப்பற்றி பேச வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்,

 

Related posts

கே ஜி எஃப் 2 (பட விமர்சனம்)

Jai Chandran

பெட்ரோல் விலை உயர்வு எதிர்த்து போராட்டம் தொடரும்: கமல் அறிவிப்பு

Jai Chandran

Shruti Haasan’s Impromptu Performance in Bangkok

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend