கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் தமிழகத்தில் அமல்படுத் தப்பட்டுள்ளது. வரும் 23-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ளதால் தொடர்ந்து நீடிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் தமிழகத்தில் தளர்வு களுடன் கூடிய ஊரடங்கு செப். 6-ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவ தாக அரசு அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு,:
* செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும்.
* 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப். 15ஆம் தேதிக்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.
* ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும்.
* தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி
* கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி
* இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க அனுமதி
* தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி
* வரும் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்பட அனுமதி
* கடற்கரைகளில் மக்களுக்கு மீண்டும் அனுமதி (இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்)
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
