சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறு வனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித் துள்ள படம் சில்லு வண்டுகள். இதில் சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகமாகியுள்ளனர். மற்றும் கமலி, கார்த்திக், நிரஞ்சனி தனசேகரன், சீர்காழி பாலகுரு, டிரம்பட் பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதா பாத்திரத்தில் தயாரிப் பாளர் தி.கா.நாராயணன் மற்றும் மா.குமார் பொன்னுச் சாமி இருவரும் நடித்துள் ளனர். தேவா இசை அமைத்திருக் கிறார்.
இப்படத்தின் ஆடியோவெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோ வில் நடந்தது.
இதில் தயாரிப்பளர் கே.ராஜன் பேசியதாவது:
’சில்லு வண்டுகள் பட டீஸர், பாடல்கள் அற்புதமாக வந்திருக்கிறது. அதில் நடித் திருக்கும் குழந்தைகள் அருமையாக நடித்திருக்கி றார்கள். ஒரு காட்சியில் அப்பா அம்மா நம் மீது காட்டுவது தான் காதல் என்று வரும் வசனம் உண்மையில் அற்புதம். இந்த படத்தில் நடிக்கும் குழந்தைகளுக்கு படிப்பும் முக்கியம் முதலில் படிப்பு பிறகுதான் நடிப்பு.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்:
சில்லு வண்டு கள் பாடல் நன்றாக வந்திருக் கிறது. அதில் நடித்த குழந்தை களும் நன்றாக நடித்திருக் கிறார்கள். தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் ஆகும் போது எவ்வளவு பேர் பார்க்கிறார் கள். என்ன கலெக்ஷன் ஆகிறது என்பது தெரிவதில் லை. எனவே அரசு அதற்காக ஆன்லைன் உருவாக்கி டிக்கெட் பதிவு செய்து டிக்கெட்டுகள் வழங்க உத்தரவிட வேண்டும் அதற் கான வேலைகளை அரசு செய்து வருகிறது. விரைந்து அதை நடமுறைப்படுத்தினால் எவ்வளவு பேர் பார்க்கிறார் கள், எவ்வளவு வசூல் ஆகிறது என்பது தெரியும்.
இசை அமைப்பாளர் தேவா;
குழந்தைகளுக்காக படம் வந்து நீண்ட நாட்கள் ஆகிறது. சில்லு வண்டுகள் கதையை என்னிடம் இயக்குனர் சுரேஷ் கே வெங்கிடி சொன்னபோதே அருமையாக இருந்தது. எப்படி சொன்னாரோ அப்படியே படமாக்கி இருக்கிறார். இந்த படத்துக்கு இசை அமைத்த போது நானும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மட்டு மே இருந்தோம். கவிஞர்கள் பாடல் எழுதி கொடுத்து விட்டனர். கம்போசிங்கின் போது அவர்கள் யாரும் வரவில்லை. இந்த மேடையில் தான் அவர்களை நான் பார்க்கி றேன். நல்ல வார்தைகள் பயன் படுத்தி பாடல் எழுதி இருந் தனர். கவிஞர்கள் முக்கியம். பாடல்களுக்கு ஏற்ப இப்படத் தில் நடித்த சிறுவர், சிறுமி யர்கள் அற்புதமாக நடனம் ஆடியிருக்கிறார்கள். பின்னணி இசை கோர்ப்பின் போதெல் லாம் அவர்களின் நடிப்பை கண்டு வியப்படைந் தேன்.
இந்த மேடையில் தயாரிப்பா ளர் கே.ராஜன் வந்திருக்கிறார். என் மகன் ஸ்ரீகாந்த் தேவாவை அவர்தான் இசை அமைப்பாள ராக அறிமுகப்படுத்தினார். ராசியானவர். ஆர்.வி.உதயகுமார் இங்கு இருக்கிறார். அவரது 2 படங் களுக்கு நான் இசை அமைத்தி ருக்கிறேன். இளையாராஜா சார் அவரது படங்களுக்கு நிறைய இசை அமைத்திருக் கிறார். எதிர்காலத்தில் உதயகு மாருடன் படங்கள் செய்வேன். சில்லு வண்டுகள் படத்தின் இயக்குனர் சுறுசுறுப்பானவர். அதேபோல் தயாரிப்பாளர் நாராயணன் நல்ல படம் எடுத்திருப்பதுடன் நடித்தும் இருக்கிறார். இப்படம் வெளியாகி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
எஸ்.வி. சேகர் பேசியதாவது:
சில்லு வண்டுகள் பாடல் திரையிடப்பட்டது. நன்றாக இருந்தது. டிவிக்கும் சினிமா வுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. டிவியில் சீரியல் பார்ப்பவர்கள் அழுவார்கள், சினிமாவில் படம் தயாரிப்ப வர்கள் அழுவார்கள். சில்லு வண்டுகள் படத்தில் குழந்தை கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நன்கு படிக்க வேண்டும். படிப்பு மிக முக்கியம் என்பது அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சினிமாவில் நடிக்கும் குழந்தைகள் எவ்வளவோ பேர் படிக்க வசதி இல்லாமல் இருக்கிறார்கள். காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களும் வறுமையில் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் என்னுடைய டிரஸ்ட்டிலிருந்து நான் ஒருவருடம் படிப்புக்கு பணம் கட்டி இருக்கிறேன்.
என்னை பார்த்து நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். ஏன் அப்படி கேட்கிறார்கள். இத்தனை வருடம் நடித்துக் கொண்டு தானே இருக்கிறேன். சினிமாவில் இப்போது ஏன் நடிப்பதில்லை தெரியுமா? யாரும் என்னை கூப்பிடு வதில்லை. வேறு காரணம் எதுவும் இல்லை. கூப்பிட்டால் நடிப்பேன்.
இந்த ஆடியோ விழா தொடங்க காலதாமதம் ஆகிக்கொண்டிருந்தது. ஏன் என்று கேட்டேன், சசிகலா வரவில்லை என்றார்கள். அவர் நேற்றே வந்துவிட்டாரே என்றேன். இல்லை இப்போது தான் வந்துக் கொண்டிருக் கிறார் என்றார். கடைசியில் நிகழ்ச்சி தொகுப்பாளினி பெயர் சசிகலா என்றார்கள். இந்த மேடையில் அவர் மைக்முன் பேசும்போது ஒருவர் அவர் காலில் விழுந்து விட்டு சென்றார். இங்குமா இப்படி என்று தோன்றியது. கடைசியில் அந்த நபர் காலில் அணிந்திருந்த ஷூ லேஸை சரிசெய்துகொண்டிருந்தாராம். தமிழக அரசு எல்லாவற்றிலும் முன்னோடியாக இருக்கிறது. சினிமாவும் அதுபோல் முதலிடத்துக்கு வர வேண்டும். சமீபத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியானது. அப்படம் சில நாட்களிலேயே ரூ 100 கோடி வசூலித்தது, சினிமாவுக்கு மீண்டும் ரசிகர்களை அப்படம் வரவழைத்திருக்கிறது அதற்காக நன்றி.
படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கே.வெங்கிடி கூறும்போது,’
இது முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்களை கொண்டு குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் என்பதை விட பாடம் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்கை யில் அடி மட்டத்திலிருந்து, மேல் மட்டத்திற்கு வளர வேண்டும் என்றால் அதற்கு தவறான வழிகளை பின்பற்றக் கூடாது என்பதை இதில் ஆழமாக சொல்கிறோம்’ என்றார்.
தயாரிப்பாளர் தி.கா. நாராயணன் பேசியது:
படம் எடுக்க வேண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. 7 வருடங்களுக்கு முன்பு திட்டமிட்டு அது இப்போது நிறைவேறி இருக் கிறது. இப்படத்தை வெற்றி அடையச் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அடுத்த படம் எடுக்க தயாராக இருக்கி றேன். இப்படம் உருவாக இசை அமைப்பாளர் தேவா தான் காரணம்’ என்றார்.
கில்டு தலைவர் ஜாகு வார் தங்கம். தயாரிப்பா ளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜய் முரளி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். பி ஆர் ஓ புவன் வரவேற்றார்