தமிழகம் முழுவதிலும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக் கான ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காத்திடும் பொருட்டும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட வும், தொழில் பாதுகாப்பு பெற்றிடவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை தொழிற்சங்கமான நம்மவர் தொழிற்சங்க பேரவையின் உறுப்பு தொழிற்சங்கமாக நம்மவர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற் சங்கம் மாநில அளவில் இந்திய தொழிற்சங்க சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவுச் சான்றிதழ் இன்றுமக்கள் நீதி மய்யம் தலைவர் .கமல்ஹாசனிடம் நிர்வாகிகளால் வழங்கப்பட்டு வாழ்த்து பெறப்பட்டது.
இத்தொழிற் சங்கத்தில் தமிழகம் முழுவதும் உறுப்பினராக இணைந்துள்ள, இணையக் கூடிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொழிற்சங்கம் சார்பாக முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் செய்து தர உள்ளோம்.
நீங்கள் உறுப்பினராக சேர விரும்பினால் கீழ்கண்ட விவரங்களுடன்
1) பாஸ்போட் சைஸ் போட்டோ – 1
2) ஓட்டுநர் உரிமம் நகல்
3) ஆதார் கார்டு நகல்
4) ஆண்டு சந்தா ரூ.300/-
மாநில தலைவர்
திரு ச.சரவணகுமார்
9840795555
மாநில பொதுச் செயலாளர்
திரு L.விஜயன்
9094595813
ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
நம்மவர் ஆட்டோ தொழிற்சங்கம்
நம்மவர் தொழிற்சங்கப்பேரவை இணைப்பு. மக்கள் நீதி மய்யம்.
