லஞ்ச ஊழலை கட்டுப்படுத்திட,
“சேவை பெறும் உரிமைச் சட்டத்தை”
தமிழகத்தில் அமல்படுத்தக் கோரி தமிழகம் தழுவிய நிகழ்வு நடத்துகிறது மக்கள் நீதி மய்யம்:
லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்தி, அரசு சேவைகளை பொதுமக்கள் விரைவாகப் பெற்றிட வழிவகுக்கும் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கோரி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் நாளை, 21-3-22 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுக் கொடுக்க உள்ளனர். நடைபெற்றுக்கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இச் சட்டத்தை அமல் படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளனர்.
குறித்த காலத்திற்குள் அரசு சேவைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக இந்நிகழ்வில் மய்ய நிர்வாகிகள் ” கடிகாரத்தைக்” கையில் ஏந்திச்செல்ல உள்ளார்கள்.(Timely delivery of govt services)
