தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் அவரது முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் .ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.