Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஆகஸ்ட்டிலும் கொரோனா ஊரடங்கு தொடரும்.. தமிழக முதல்வர் அறிக்கை முழுவிவரம்.. 

சென்னை ஜூலை:

கொரோனா வைரஸ் தொற்று குறைந்த போதிலும் ஊரடங்கு தளர்வுஜஉடன் தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளா. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியா முழுவதும்‌, கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றை தடுப்பதற் காக, மத்திய அரசின்‌ வழிகாட்டுதலின் படி, தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, தமிழ்நாட்டில்‌ 25.3.2020 முதல்‌ ஊரடங்கு உத்தரவு அமலில்‌ இருந்து வருகிறது. நான்‌ பல்வேறு தினங்களில்‌ நடத்திய ஆய்வுக்‌ கூட்டங் களின்‌ அடிப்படையிலும்‌, மூத்த இந்திய ஆட்சிப்‌ பணி அலுவலர்களைக்‌ கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங் கிணைப்புக்‌ குழுக்களின்‌ கருத்துக்களின்‌ அடிப்படையிலும்‌, பல்வேறு தினங்களில்‌ மாவட்ட ஆட்சியர்களின்‌ காணொலிக்‌ கூட்டத்தில்‌ தெரிவிக்கப் பட்ட கருத்துக்களின்‌ அடிப்படையி லும்‌, மருத்துவ நிபுணர்கள்‌ மற்றும்‌ பொது சுகாதார வல்லுநர்கள்‌ குழுவுடன்‌ நடத்தப்பட்ட கூட்டத்தில்‌ தெரிவிக் கப்பட்ட கருத்துக்களின்‌ அடிப்படையி லும்‌, மத்திய அரசின்‌ அறிவுரைகளின் படியும்‌, தமிழகத்தில்‌ 31.7.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக் கப்பட்டது. இருப்பினும்‌, பொது மக்களின்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டும்‌, பொருளாதாரத்தை மீட்டெ டுக்கும்‌ நோக்கத்திலும்‌, பெருநகர சென்னை காவல்துறையின்‌ எல்லைக் குட்பட்ட பகுதிகள்‌ மற்றும்‌ தமிழ் நாட்டின்‌ பிற பகுதிகளில்‌ பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன்‌ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு அம்மாவின்‌ அரசு, கொரோனா நோய்த்‌ தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர் களுக்கு தேவையான தடுப்பு நடவடிக் கைகளை எடுத்தும்‌, சிகிச்சைகளை வழங்கியும்‌, நிவாரணங்களை வழங்கி யும்‌ முனைப்புடன்‌ செயல்பட்டு வரு கிறது. அதனால்‌தான்‌, தமிழ்நாட்டில்‌ சிகிச்சைக்குப்‌ பின்‌ குணமடைந்து வீடு திரும்புவோர்‌ சதவீதம்‌ நாட்டிலேயே அதிகமாகவும்‌, நோய்த்‌ தொற்றினால்‌ ஏற்படும்‌ உயிரிழப்பு மிகக்‌ குறைவாக வும்‌ இருந்து வருகிறது.

பல்வேறு தினங்களில்‌ நான்‌ நடத்திய ஆய்வுக்‌ கூட்டங்களின்‌ அடிப்படையில்‌, குறிப்பாக 29.7.2020 அன்று நடத்தப் பட்ட காணொலிக்‌ கூட்டத்தில்‌, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்கள்‌ தெரி வித்த கருத்துகளின்‌ அடிப்படையிலும்‌, மருத்துவ நிபுணர்கள்‌ மற்றும்‌ பொது சுகாதார வல்லுநர்கள்‌ குழுவுடன்‌ 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோச னைகளின்‌ அடிப்படையிலும்‌, மூத்த அமைச்சர்களுடன்‌ கலந்தாலோசித்தும்‌, கொரோனா வைரஸ்‌ நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும்‌, தளர்வுகளுடனும்‌, 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும்‌ மேலும்‌ நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும்‌, ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும்‌ (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 &30.8.2020) எவ்வித தளர்வுகளும்‌ இன்றி, தமிழ்நாடு முழுவதும்‌ முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்‌.

1) பெருநகர சென்னை காவல்‌ துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்‌ நோய்‌ கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில்‌ (exzept containment zone) ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணி களுடன்‌ கீழ்க்காணும்‌ பணிகளுக்கும்‌ 1.8.2020 முதல்‌ அனுமதி அளிக்கப்படு கிறது:

1) தற்போது 50 சதவீத பணியாளர் களுடன்‌ செயல்படும்‌ அனைத்து

தொழில்‌ நிறுவனங்கள்‌, தனியார்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ ஏற்றுமதி நிறுவனங்கள்‌, 75 சதவீத பணியாளர் களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

2) உணவகங்கள்‌ மற்றும்‌ தேநீர்க்‌ கடைகளுக்கென அரசால்‌ ஏற்கனவே

வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, உணவகங்கள்‌ மற்றும்‌ தேநீர்‌ கடைகளில்‌ உள்ள மொத்த இருக்கை களில்‌, 50 விழுக்காடு இருக்கைகளில்‌ மட்டும்‌ வாடிக்கையாளர்கள்‌ அமர்ந்து

காலை 6 மணி முதல்‌ இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும்‌, உணவகங்களில்‌ குளிர்‌ சாதன வசதி இருப்பினும்‌, அவை இயக்கப் படக்‌ கூடாது. உணவகங்களில்‌ முன்பு

இருந்தது (31.7.2020 வரை) போன்று காலை 6 மணி முதல்‌ இரவு 9 மணி வரை பார்சல்‌ சேவை மட்டும்‌ அனுமதிக்கப் படும்‌.

3) ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலை யான வழிகாட்டு நடைமுறைகளை (Standard Operating Procedure) பின்பற்றி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும்‌ நகராட்சி பகுதிகளில்‌ உள்ள சிறிய திருக்கோவில் கள்‌, அதாவது 10,000 ரூபாய்க்கும்‌ குறை வாக ஆண்டு வருமானம்‌ உள்ள திருக் கோவில்களிலும்‌, சிறிய மசூதிகளிலும்‌, தர்காக்களிலும்‌, தேவலாயங்களிலும்‌ மட்டும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர் களின்‌ அனுமதியுடன்‌ பொதுமக்கள்‌ தரிசனம்‌ அனுமதிக்கப்படும்‌. பெரிய வழிபாட்டுத்‌ தலங்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள அனைத்து வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌ , பொது மக்கள்‌ தரிசனம்‌ அனுமதிக் கப்பட மாட்டாது.

4) காய்கறி கடைகள்‌, மளிகைக்‌ கடைகள்‌ ஆகியவை காலை 6 மணி முதல்‌ மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில்‌, தற்போது இக்கடைகள்‌ காலை 6 மணி முதல்‌ இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக் கப்படுகிறது.

5) ஏற்கனவே காலை 10 மணி முதல்‌ மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக் கப்பட்ட மற்ற கடைகள்‌, தற்போது காலை 10 மணி முதல்‌ மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்‌.

6) அத்தியாவசிய மற்றும்‌ அத்தியா வசியமற்ற பொருட்கள்‌ உட்பட அனைத்து பொருட்களையும்‌, மின்‌ வணிக நிறுவனங்கள்‌ (E Commerxe) மூலமாக வழங்க அனுமதிக்கப்படு கிறது.

11)

பெருநகர சென்னை காவல்‌ துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ் நாட்டில்‌ உள்ள அனைத்து மாவட்ட பகுதிகளிலும்‌ நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகள்‌ தவிர மற்ற பகுதிகளில் (except containent Zone), ஏற்கனவே அனுமதிக் கப்பட்ட பணிகளுடன்‌ கீழ்க்காணும்‌ பணிகளுக்கு 1.8.2020 முதல்‌ அனுமதி அளிக்கப்படுகிறது:

1) அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறை களைப்‌ (standad operating procedure) பின்பற்றி, ஏற்கனவே ஊராட்சிப்‌ பகுதிகளில்‌ அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, பேரூராட்சி மற்றும்‌ நகராட்சி பகுதிகளில்‌ உள்ள சிறிய திருக்கோவில்கள்‌, அதாவது 10,000 ரூபாய்க்கும்‌ குறைவாக ஆண்டு வருமானம்‌ உள்ள திருக்கோவில் களிலும்‌, சிறிய மசூதிகளிலும்‌, தார்காக் களிலும்‌, தேவலாயங்களிலும்‌ மட்டும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களின்‌ அனுமதியுடன்‌ பொதுமக்கள்‌ தரிசனம்‌ அனுமதிக்கப்படும்‌. பெரிய வழிபாட்டுத்‌ தலங்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள அனைத்து வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌, பொது மக்கள்‌ தரிசனம்‌ அனுமதிக்கப்  பட மாட்டாது.

பொது

 

* குற்றவியல்‌ நடைமுறைச்‌ சட்டம்‌ பிரிவு 144ன்‌ கீழ்‌ பொது இடங்களில்‌ ஐந்து நபர்களுக்கு மேல்‌ கூடக்‌ கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில்‌ இருக்கும்‌.

* தமிழ்நாடு முழுவதும்‌ நோய்க்‌ கட்டுப் பாட்டு பகுதிகளில்‌ (containment zones) தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப் படும்‌.

* அனைத்து, தொழில்‌ மற்றும்‌ வணிக நிறுவனங்கள்‌ தங்களது ஊழியர்கள்‌/ பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில்‌ மற்றும்‌ வணிக நிறுவனங்களில்‌ நிலை யான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்‌.

* இரயில்‌ மற்றும்‌ விமான போக்குவரத்தைப்‌ பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்‌.

*ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம்‌ விட்டு மாவட்டம்‌ செல்லும் போதும்‌, வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும்‌ போதும்‌, சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்‌ தலைவரிடம்‌ / சென்னை மாநகராட்சி ஆணையரிடம்‌ முறைப்படி இ பாஸ் பெற வேண்டும்‌.

*தமிழ்நாடு முழுவதும்‌ ஆகஸ்ட்‌ 15ம்‌ தேதி, மத்திய அரசின்‌ வழிகாட்டுதல் களின்படி, சமூக இடைவெளி, முககவசம்‌ அணிதல்‌ போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும்‌.

ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள கீழ்காணும்‌ செயல்பாடுகளுக்கான தடைகள்‌, மறு உத்தரவு வரும்‌ வரை தொடர்ந்து அமலில்‌ இருக்கும்‌:-

* மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும்‌

மற்றும்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து பகுதிகளிலும்‌ உள்ள பெரிய வழிபாட்டு தலங்களிலும்‌ பொதுமக்கள்‌ வழிபாடு.

* அனைத்து மதம்‌ சார்ந்த கூட்டங்கள்‌.

* நீலகிரி மாவட்டத்திற்கும்‌, கொடைக் கானல்‌, ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும்‌, வெளியூர்‌ சுற்றுலா பயணிகள்‌ செல்ல தடை தொடரும்‌.

* தங்கும்‌ வசதியுடன்‌ கூடிய ஹோட்டல் கள்‌, ரிசார்ட்டுகள்‌, பிற விருந்தோம்பல்‌ சேவைகளுக்கு தடை தொடரும்‌. எனினும்‌, மருத்துவத்‌ துறை, காவல்‌ துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ வெளி மாநிலத்த வர்கள் தனிமைப்படுத்துவதற்கு மட்டும்‌ விலக்கு அளிக்கப்படுகிறது.

* வணிக வளாகங்கள்‌ (shopping malls).

* பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, பயிற்சி நிறுவனங்கள்‌, ஆராய்ச்சி நிறுவனங்கள்‌ மற்றும்‌ அனைத்துக்‌ கல்வி நிறுவனங் கள்‌. எனினும்‌, இந்நிறுவனங்கள்‌ இணைய வழிக்‌ கல்வி கற்றல்‌ தொடர்வ துடன்‌ அதனை ஊக்குவிக்கலாம்‌.

*மத்திய உள்‌ துறை அமைச்சகத்தால்‌ அனுமதிக்கப்பட்ட பணிகளைத்‌ தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்‌.

* மெட்ரோ ரயில்‌ / மின்சார ரயில்‌.

*திரையரங்குகள்‌, உடற்பயிற்சிக்‌ கூடங்கள்‌, நீச்சல்‌ குளங்கள்‌, கேளிக்கைக்‌ கூடங்கள்‌, மதுக்கூடங்கள்‌ (Bar), பெரிய அரங்குகள்‌, கூட்ட அரங்குகள்‌, கடற் கரை, சுற்றுலாத்‌ தலங்கள்‌, உயிரியல்‌ பூங்காக்கள்‌, அருங்காட்சியகங்கள்‌ போன்ற பொது மக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்கள்‌.

* அனைத்து வகையான சமுதாய அரசியல்‌, விளையாட்டு, பொழுது போக்கு, கலாச்சார நிகழ்வுகள்‌, சமய, கல்வி, விழாக்கள்‌, கூட்டங்கள்‌ மற்றும்‌ ஊர்வலங்கள்‌.

*மாநிலங்களுக்குள்‌ உள்ள பொது மற்றும்‌ தனியார்‌ பேருந்து போக்கு வரத்து மற்றும்‌ மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும்‌ தனியார்‌ பேருந்து போக்குவரத்து. மேற்கண்ட கட்டுப்பாடுகளில்‌, தொற்றின்‌ தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள்‌ அளிக்கப்படும்‌.

அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும்‌, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித் தாலும்‌, மக்களின்‌ ஒத்துழைப்பு இல்லை யென்றால்‌, இந்த நோய்‌ பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள்‌ வெளியில்‌ செல்லும்போதும்‌, பொது இடங்களிலும்‌ முககவசம்‌ அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது மக்கள்‌ வீட்டிலும்‌, பணிபுரியும்‌ இடங்க ளிலும்‌ அடிக்கடி சோப்பை பயன் படுத்தி கை கழுவுவதையும்‌, வெளி யிடங்களில்‌ முககவசத்தை அணிந்து செல்வதையும்‌, சமூக இடைவெளியை தவறாமல்‌ கடைபிடித்தும்‌, அவசிய தேவை இல்லாமல்‌ வெளியில்‌ செல்வதைத்‌ தவிர்த்தும்‌, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்‌ தான்‌, இந்த நோய்த்‌ தொற்றை கட்டுப்படுத்த முடியும்‌. மாண்புமிகு அம்மாவின்‌ அரசு அமல்படுத்தி வரும்‌ ஊரடங்கு மற்றும்‌ நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌ தீவிர பரிசோதனை மூலம்‌ நோய்த்தொற்று அதிகரிக்கும்‌ வேகம்‌ குறைந்திருந் தாலும்‌, நோய்த்தொற்றால்‌ பாதிக்கப் பட்டவர்கள்‌ எண்ணிக்கை கணிசமாக உள்ள நிலையில்‌ மக்களைக்‌ காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறை யை மேலும்‌ தொடர வேண்டிய நிலை யில்‌ அரசு உள்ளது. இதனால்‌ நோய்ப் பரவலை மேலும்‌ கட்டுப்படுத்த இயலும்‌. எனவே, பொதுமக்கள்‌ அரசின்‌ முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்‌ கொள்கிறேன்‌. நோய்‌ தொற்றின்‌ போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின்‌ ஒத்துழைப்பையும்‌, நோய்‌ தொற்றின்‌ நிலையையும்‌ கருத்தில்‌ கொண்டு அவ்வப்போது படிப்படியாக தளர்வுகள்‌ வழங்கப்படும்‌.

இவ்வாறு முதல்வர்  பழனிசாமி கூறி உள்ளார்.

 

 

Related posts

*கட்டாளன்” ஆக்ஷன் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

Jai Chandran

Trailer Out: SonyLIV’s Tamil Rockerz to stream from 19th Aug

Jai Chandran

5000 டிரக்குகள் முதலாளியான சாமானியன் கதை விஜயானந்த் : ரிஷிகா சர்மா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend