Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கே.சி.பொக்காடியா மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

இந்தி பிரபல டைரக்டர் , தயாரிப்பாளர் K.C. பொக்காடியா ( K.C.Pokadia ) மீண்டும் தமிழுக்கு வருகிறார். BMB புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இவர் பல பிரமாண்ட படங்களை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்தார். சென்னையில் வளர்ந்த இவர், இந்தியில்
மட்டும் 59 படங்களை தயாரித்துள்ளார். அதில் 11 படங்களில் அமிதாப்பச்சனும், 5படங்களில் ரஜினிகாந்தும்,18 படங்களில் சல்மான்கான்,ஷாருக்கான், அமீர்கான் இந்த மூன்றுகான்களும் நடித்தார்கள். மேலும் 5படங்களில் அட்சயகுமாரும் மற்ற படங்களில் பிரபல நடிகர்கள் நடிகைகள் பலரும் நடித்துள்ளனர். ரஜினிகாந்தை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். இவர் இந்தியில் மட்டும் 38 படங்களை இயக்கியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாகதென்னிந்திய மொழி இயக்குனர்கள் பலரை இந்தியில் அறிமுகப்பபடுத்தியுள்ளார். இவர் இப்பொழுது தமிழிலும் தெலுங்கிலும் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த B.M.B. புரொடக்ஷன்ஸ் நிறுவத்தில் 25 வருடங்களாக ஒரு அங்கமாக ( one of the Director ) இருக்கும் தமிழ் தயாரிப்பாளர், நடிகர் தமிழ்மணியின் வீட்டுக்கு இன்று திடீரென்று சென்றார் கே.சி.பொக்காடியா. அவரிடம், தமிழில் பல படங்களை தயாரிப்பதாக உறுதியளித்துள்ளார்.

Related posts

அன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை

Jai Chandran

Mega157 Pre-production Works Begin

Jai Chandran

டப்பிங் யூனியன் இறகு பந்து போட்டி: ஆர்.கே.செல்வமணி பரபரப்பு பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend