Trending Cinemas Now
விமர்சனம்

காதம்பரி (பட விமர்சனம்)

படம்: காதம்பரி
நடிப்பு: அருள், காஷிமா ரஃபி, அகிலா நாராயணன், சர்ஜுன், நின்மி, பூஷிதா மகாராஜன், முருகானந்தம்
தயாரிப்பு: அரோமா ஸ்டுடியோஸ் அருள்
இசை: ப்ரித்வி
ஒளிப்பதிவு: விடிகே.உதயன்
எழுத்து இயக்கம் : அருள்
அருள்-காஷிமா காதலிக்கின்றனர். காஷிமா ஷூட்டிங்கிற்காக வெளியூர் செல்லும்போது தன்னுடன் அருளையும் அழைக்கிறார். அருளுடன் மேலும் நண்பர்கள் சர்ஜுன், தங்கை நின்மி, அகிலா ஆகியோரும் சேர்ந்து செல்கின்றனர். மலைப்பாதை வழியாக காரில் செல்லும்போது  சிறுவிபத்தில் சிக்குகின்றனர்.. லேசாக காயம் அடையும் அவர்கள் காட்டுப் பகுதியில் சிக்கியதால் அங்கு பாதுகாப்பான இடத்தில் தங்க எண்ணுகின்றனர். அப்பகுதியிலிருக்கும் பங்களா ஒன்றில் அடைக்கலம் புகுகின் றனர். நேரம் செல்லச் செல்ல அந்த இடத்தில் அமானுஷயமான விஷயங்கள் நடக்கிறது. ஒரு மரப்பெட்டி அறையிலி ருந்து சத்தம் வருவதை கேட்டு அங்கு செல்கின்றனர். ஒரு சிறுமி அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார். அவரை ஹீரோவும் நண்பர்களும் மீட்கின்றனர். வெளியில் மழை கொட்டுவதால் அங்கிருந்து செல்ல முடியாமல் இரவும் அங்கு தங்குகின்றனர். ஆனால் அது நல்லதாக இல்லை. மீட்கப்பட்ட சிறுமி 40 வருடமாக அந்த அறையில் அடைப்பட்டு கிடப்பதாக சொல்லி அதிர்ச்சி தருகிறார். அந்த சிறுமியின் உடம்பில் சூனியகாரி ஒருத்தி இருந்துக் கொண்டு ஆட்டம் காட்டுகிறார். ஒவ்வொருவரையாக சாகடிக்க தொடங்கி  இறுதியில் ஹீரோவைன் உடம்பை கேட்டு கெடு விதிக்கிறாள்.  அதர்கான  பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
காட்டுப்பகுதி மலைப்பாதையில் ஹீரோ அருள் நண்பர களுடன் காரில் செல்லும்போது கதையே அந்த பகுதியில்தான் நடக்கப்போகிறது என்பதை யூகிக்க முடியவில்லை.
கார் விபத்தில் சிக்கி எல்லோரும் அங்கிருக்கும் பங்களாவுக்குள் செல்லும்போது இது திகில் சமாச்சாரம் தான் என்பதை உணரமுடிகிறது. படம் முழுவதும் பங்களாவுக்குள்ளேயே படமாக்கப்பட்டிருக்கிறது. பேய் என்று சொல்லாமல் சூனியகாரி கதையாக மாற்றி சொல்லி இயக்குனர் அருள். இவரேதான் ஹீரோவாக நடித்திருக்கிறார், தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்.
அந்த பங்காளவில் உள்ள மரப்பெட்டி அறையில் சுவற்றில் கிறுக்கப்பட்ட மந்திரங்கள், படங்கள் எல்லாம் ஏதோ ஒரு கட்டு போட்டு யாரையோ அடைத்து வைத்தற்காகத்தான் என்று தெளிவாக சொல்லி இருக்கலாம்.


மரப்பெட்டி அறையிலிருந்து சிறுமி பூஷிதாவை ஹீரோ மீட்டு வந்தபிறகு அந்த சிறுமி யால்தான் இவர்களுக்கு ஆபத்து வரப்போகிறது என்பது தெரிந்துவிடுகிறது.
பங்களா காவலாளியிடம் செல்லும் சிறுமி பூஷிதா ’என்னை ஏம்ப்பா 40 வருஷாமா அடைச்சி வெச்சிருந்தே’ என்று ஆவேசமாக கத்தியபடி கேட்கும்போது மிரள வைக்கிறார்.
சிறுமியை பேட்டி எடுக்கும் நின்மியை மடக்கி, ’நீ ஏன் பழைய காதலனுடன் நடந்த தப்பை சொல்லலே என்று கேட்டு ஷாக் தருகிறார்.
நின்மி உடம்பிற்குள் சூனியகாரி ஆவி புகுந்தபிறகு அது ஹீரோவின் நண்பன் விக்டரை பழிவாங்குவது தொடர்ந்து விக்டர் உடம்பில் புகுந்து மற்றவர்களை கொல்ல பார்ப்பது என்று உடம்பு விட்டு உடம்புக்கு சூனியக்காரி ஆவி தாவிக்கொண்டே இருக்கிறது.
கிளைமாக்ஸில் ஹீரோ அருள் உடம்பை கேட்டு அவரது தங்கை அகிலாவின் உடம்பிற்குள் புகுந்து மிரட்டுவது அச்சம் படரவிடுகிறது.
போலீஸ் அதிகாரியாக வரும் முருகானந்தம் கடைசியில் வந்தாலும் மற்றவர்களை காப்பாற்ற முயன்று மனதில் இடம் பிடிக்கிறார்.
மகாராஜன் தாத்தா வாய்பேச முடியாமல் சைகை காட்டி பயமுறுத்துகிறார்.
நடிப்பு, எழுத்து, இயக்கம், தயாரிப்பு என்று நான்கு பொறுபுக்களை ஏற்றிருக்கும் அருள் வழக்கான பேய் கதையாக இல்லாமல் சூனியகாரி கதை என்று சொல்லி கதைக்கு இனிப்பு தடவி இருக்கிறார். பாடல்களுக்கு வாய்ப்புருந்தும் படத்தில் பாடல்கள் இல்லை. திடீர் திலூட்டும் காட்சிகள் என்றில்லாமல் அடுத்து லேசாக பயமுறுத்தி அடுத்து என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸ் படத்துக்கு உயிர் கொடுக்கிறது. பிரித்வி இசையில் இன்னும் மிரட்டி இருந்தால் காட்சிகளுக்கு மேலும் வலு கூடி இருக்கும். புதியவர்களின் வித்தியாச முயற்சிக்கு ஒரு பாராட்டு தரலாம்.
விடிகே உதயனின் கேமரா சுற்றி சுற்றி பங்களாவுக் குள்ளேயே சுழன்றிருக்கிறது.
காதம்பரி என்றால் யார் என்பது முக்கால் வாசி படத் தில்தான் ஒப்பன் செய்திருக் கிறார்கள்.
காதம்பரி- சூனியகாரியின் மிரட்டல்.

Related posts

வீர தீர சூரன் 2ம் பாகம் (பட விமர்சனம்)

Jai Chandran

ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும் (பட விமர்சனம்)

Jai Chandran

ஹரா (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend