தமிழக அரசு வரும் 24ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் முக்கிய தளர்ர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* மக்கள் வெளியூர் செல்ல இன்றும் ( மே 22ம் தேதி) நாளையும் (மே 23ம் தேதி) தனியார், அரசு பேருந்துகள் இயக்கப்படும்.
* தமிழக அரசின் இ-பதிவு நடைமுறையில் திருமணத்துக்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது.
* மருத்துவ காரணம், இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* மருத்துவ காரணங்களுக்கு மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.