நடிகர் கிஷோர், சார்லி , நகுலன் வின்சென்ட், ஜெய் லா நடித்திருக்கும் இந்த திரைப் டம் இந்திய சினிமாவில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் கமர்சியல் படம் . எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக் கப்பட்டிருக்கிறது.

நூற்றி எண்பது நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரிகர்சல் செய்து அதன் பின்னர் படப் பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.
இதுபற்றி படத்தின் இயக்கு னர் அஜூ கூறியதாவது:
கிஷோர் , சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து நடித்ததே இந்த படம் வெற்றி கரமாக வந்திருக்கிறது. நாங் கள் நினைத்ததைவிட பிரமாத மாக வந்திருக்கிறது.
ஒரே ஷாட்டில் படமாக்குவது எளிதல்ல, அதுவும் ஒரு கமர்சி யல் படத்தில் இந்த முயற்சி பெரும் சவாலானது. எனது குழுவினரின் முழு ஒத்துழைப் பாலும், நடிகர்களின் முழு அர்பணிப்பாலும் இந்த முயற்சி மிக சிறப்பாக வந்தி ருக்கிறது.

படம் பார்ப்பவர்களுக்கு இது புது அனுபவத்தைத்தரும்
இவ்வாறு இயக்குனர் அஜூ கூறினார்.
