Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டொவினோ தாமஸ் நடித்த “கடைசி நொடிகள்”

வரிசையாக பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது. அதில் உதவியாளராக பாரன்ஸிக் ஆபீஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார். கொலைகளும் கொலை நடத்திய விதமும் ஒரே மாதிரி இருப்பதால் கொலைகாரன் ஒருவரே தான் செய்திருக்கனும் என்று அந்த பாரன்ஸிக் ஆபீசர் கண்டுபிடிக்கிறார். கண்டுபிடித்து போலீஸிடம் சொன்னால் அவங்க ஏற்க மறுக்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த போலீஸ் துறையை நம்ப வைத்து அந்த கொலைகாரனை எப்படி பிடிக்கிறான் என்பது கதை. இப்படத்திற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஹாலிவுட் தரத்திற்குகொண்டு செல்கிறது. திரில்லர் என்றால் இதுதான் என்று ஒவ்வொரு காட்சிகளும் நெஞ்சை அள்ளிக் கொள்ளும் விதமாக “கடைசி நொடிகள்” உள்ளது.

கேரளாவில் பாரன்ஸிக் எனும் பெயரில் வெளிவந்து சக்க போடு போட்ட படம் இது. “கடைசி நொடிகள்” எனும் பெயரில் தமிழுக்கு ரசிமீடியா மேக்கர்ஸ் உருவாக்கியுள்ளது. விஸ்வசாந்தி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் கொலைகாரனை கண்டுபிடிக்கும் பாரன்ஸிக் ஆபீஸராக டொவீனா தாமஸ் நடித்திருக்கிறார். மேலும் மம்தா மோகன் தாஸ,
ரெபா மோனிகா, மோகன் சர்மா, பிரதாப்போத்தன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இன்னும் பலரும் உண்டு.

ஒளிப்பதிவு  அகில் ஜார்ஜ்
இசை  ஜேக்ஸ் பிஜோயி. வசனம் ஏ.ஆர், கே. ராஜராஜா. தமிழ் உருவாக்கம் -ரசி மீடியா மேக்கர்ஸ். தயாரிப்பு கோபிநாத். இணைத்தயாரிப்பு எஸ்.சந்திர சேகர். கதை திரைக்கதை இயக்கம் அனஸ்கான் – அகில்பால். பிஆர் ஓ வெங்கட்

விரைவில் படம் வெளிவருகிறது.
.

Related posts

ஒற்றைப் பனை மரம் (பட விமர்சனம்)

Jai Chandran

Pushkar and Gayathri overwhelmed celebrities

Jai Chandran

Devi Foundation volunteers distributed food packages to the poor

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend