Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரியாமணி விவாகரத்தா? பரபரப்பு பதில்

கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பிரியாமணி. இதை யடுத்து இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்ததுடன் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக் கிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னட பட தயாரிப்பாளர் முஸ்தபா ராஜா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் பெங்களூரில் இது பதிவு திருமணமாக நடந்தது இவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தநிலையில் தற்போது வலைதளங்களில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் விரைவில் பிரியாமணி கணவர் முஸ்தபாவை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது இதையறிந்த பிரியாமணி அதிர்ச்சி அடைந் தார்
தற்போது வலைதளம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார் அதில் பிரியாமணி கூறியிருப் பதாவது:
முஸ்தபா ராஜை நான் திருமணம் செய்ததில் இருந்தே எனக்கு மிரட்டல் வந்து கொண் டிருக்கிறது மதம் மாறி ஏன் திருமணம் செய்தீர்கள் . அந்த திருமணத்தை ரத்து செய்து விட்டு வாருங்கள் என்று வற்புறுத்துகிறார்கள் மேலும் இது லவ் ஜிகாத், உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஜிகாதிகளாகத்தான் இருப் பார்கள் என்றும் கூறி வருகின் றனர் இந்நிலையில் தற்போது எங்கள் இல்லற வாழ்க்கை பிரச்சனை ஆகி இருப்பதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தகவல்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன. ஆனால் அதில் எந்த உண்மையையும் இல்லை எங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது எங்களுக்குள் எந்த பிரச்சனை யும் இல்லை. நான் முஸ்தபா ராஜை மணக்க கூடாதா அவர் வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தால் என்ன? எதற்காக இப்படி தொல்லை கொடுக்கி றார்கள் எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. விவாரத்து என்பதெல்லாம் வெறும் பொய்தான் அதில் எந்த உண்மையுமில்லை இது போன்ற வதந்திகளை கண்டு நான் வருத்தப்பட மாட்டேன் பயப்பட மாட்டேன்
இவ்வாறு ப்ரியாமணி கூறியுள்ளார். பிரியா மணியின் இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related posts

பரபரப்பான “சர்தார்” படப்பிடிப்பில் கார்த்தி

Jai Chandran

சிபியின் ‘கபடதாரி’படப்பிடிப்பு நிறைவடைந்தது!

Jai Chandran

Vidaamuyarchi delivering a strong message on woman harassment – Director

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend