Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆரூர்தாஸ் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

ஆரூர்தாஸ் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித் துள்ளது.. அதில் சங்க தலைவர் நாசர் கூறியதாவது:

தமிழ் திரையுலகின் பிதாமகர் ஆரூர் தாஸ் ஐயா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் திரையுலக வரலாற்றில் அவர் செய்த சாதனைகள் அளப்பரியது. ஆயிரம் படங்களுக்கு மேல் தனது தமிழ் வசனங்களால் பெரும் புரட்சி செய்தவர் ஆரூர் தாஸ் ஐயா அவர்கள்.
அவரது வசனத்தில் வெளியான விதி படம் திரையை தாண்டி ஆடியோ கேசட்டுகளில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்ததை யாராலும் மறக்க முடியாது. தினத்தந்தி நாளிதழில் 50 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றை எழுதி தமிழ் திரைப்பட வரலாற்றையே பதிவு செய்த அயராத உழைப்பாளி ஆரூர் தாஸ் ஐயா அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கரங்களால் கலைமாமணி விருதை பெற்றவர். தமிழக அரசு சார்பில் கலைஞர் நினைவாக வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளருக்கான கலைத்துறை வித்தகர் விருதை முதலில் பெற்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்பது தமிழ் திரைத்துறைக்கே கிடைத்த பெருமை.
ஆரூர் தாஸ் ஐயா அவர்கள் மறைந்தாலும் அவரது ஆழமான வசனங்களால் தமிழ் திரைத்துறை இருக்கும் வரை அவர் புகழ் நீடித்திருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் ,தமிழ் திரையுலக ரசிகர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்கம்

இவ்வாறு எம்..நாசர் கூறியுள்ளார்.

Related posts

நடிகை கீர்த்தி சுரேஷ் திடீர் திருமணம்

Jai Chandran

எஸ்.ஜே.சூர்யா பிறந்த நாள் கொண்டாடிய ஜப்பான் ரசிகைகள்

Jai Chandran

6 விருதுகளை தட்டி சென்ற “பண்ணையாரும் பத்மினியும்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend