புதிய பறவை, பாமா விஜயம், பணம் படைத்தவன், எதிர்நீச்சல், தில்லு முல்லு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர் மூத்த நடிகை சௌகார் ஜானகி.தெலுங்கு மொழியில் அவர் நடித்த செளகார் என்ற படத்தின் மூலம் ஜானகி தனது பெயருக்கு முன்பாக செளகார் என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்டார்.
உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த சவுகார் ஜானகி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது . ஆனாலும் சிகிச்சை பலனில்லாமல் இன்று (ஆகஸ்ட் 21) காலமானார். அவருக்கு வயது 93.
சௌகார் ஜானகி மறைவு செய்தி அறிந்தவுடன் தமிழ் திரை உலகத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவருக்கு கண்ணீர் மல்க இரங்கல் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்..
நாளை காலை முதல் நேரில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று சென்னையில் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள
