Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி..

‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகிறார்  அத்விதி ஷெட்டி.

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் – தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival). இயக்குநர் மைலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் எடுத்து வைக்கிறார். ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது .

கதையின் நாயகியாக பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார்.. இன்னொரு கதாநாயகியாக, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ‘ஆண்மை தவறேல்’ துருவா, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விரைவில் திரைக்கு வரும் விதமாக இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் கதாநாயகியான அத்விதி ஷெட்டி கடந்த 11 ஆண்டுகளாக கன்னடத் திரைப்படத் துறையில் பணியாற்றி வருபவர். பல விருது பெற்ற படங்களிலும், வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களிலும் நடித்துள்ள இவர். சமீபத்தில் நடித்து வெளியான இரண்டு படங்களில், துளு மொழிப் படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது..

அதுமட்டுமல்ல இவர் அடிப்படையில் ஒரு நடனக் கலைஞரும் கூட.. கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கில் சுமார் ஐந்து நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள இவர் தற்போது ‘நோவா’ படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்துள்ளார்.

‘நோவா’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து அத்விதி ஷெட்டி கூறும்போது, “இதில் “வல்லபி. ராணுவ அதிகாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. இதுவரையிலான திரைப்பயணத்தில் மிகவும் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரம் இதுதான். இந்தக் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவமும், வலுவான நடிப்பு வாய்ப்பும், நிறைய வசனங்களும் உள்ளன..
இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படம். அதோடு நிறைய சஸ்பென்ஸும் இருக்கிறது.

எனக்கு இது ஒரு பெரிய சவாலாக இருந்தது. எனக்கு தமிழ் புரியும்.. தமிழ் படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். ஆனால் தமிழ் பேசும் நண்பர்கள் இல்லாததால் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் படப்பிடிப்பில் நான் வசனங்களை மிக விரைவாக கற்றுக்கொண்டதாகவும் என் லிப்-சிங்க் மற்றும் நடிப்பு மிகவும் நன்றாக இருந்ததாகவும் பாராட்டினார்கள். ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சியில் நான் கிளிசரின் பயன்படுத்தாமல் நடித்ததை கண்டு மொத்த படக்குழுவிடமிருந்தும் கைதட்டல் கிடைத்தது.. பொதுவாகவே அழுகைக் காட்சிகளில் நான் கிளிசரின் பயன்படுத்துவதில்லை.

படப்பிடிப்பின் நடுவில் என் பாட்டி காலமானார். அவருடன் நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன். நான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது தான் வீட்டிலிருந்து அந்த செய்தி வந்தது. அதேசமயம் முக்கியமான காட்சியில் நடிக்கவேண்டி இருந்ததால் முதலில் அந்தக் காட்சியை முடித்தேன். அதன் பிறகு மங்களூருக்குச் சென்றேன். அதிலும் மூணாரில் இருந்து சரியான் போக்குவரத்து வசதி இல்லாததால் கொச்சி, பெங்களூரு வழியாக பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் இறுதியாக என் பாட்டியின் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. அடுத்த நாளே மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பி வந்தேன். மனதளவில் அது மிகவும் கடினமான காலம். என்றாலும் என் குடும்பத்தினர், “உன் குழுவிற்கு நீ தேவைப்படுகிறாய்; திரும்பிச் செல்” என்று ஊக்கமளித்ததை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பினேன்.

பெரும்பாலும் நாங்கள் மலைப்பகுதி மற்று காடுகளின் உள்ளார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியதால் எங்களுக்கான காரவன்கள் தூரத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தன. கழிப்பறைக்குச் செல்லவும் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. மேலும் நான் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்ததால் கனமான ராணுவ பூட்ஸ்களை அணிய வேண்டியிருந்தது. அவற்றை அணிந்து நடப்பதே மிகவும் கடினமாக இருந்தது. அந்த சமயத்தில் இருந்துதான் நமது நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை இன்னும் அதிகமாக மதிக்கத் தொடங்கினேன்.

படத்தில் என் அறிமுகக் காட்சியே மழைக் காட்சியாக இருந்தது. நள்ளிரவு நேரத்தில் மூணாரின் கடும் குளிரில் டேங்கர் தண்ணீரை எங்கள் மீது ஊற்றி படமாக்கினர். 24 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அது மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது

இயக்குநர் மைலோவின் சினிமா பார்வை மிகவும் வித்தியாசமானது. பார்வையாளர்களுக்கு புதுமையான அறிவியல் புனைகதை திரைப்படத்தை வழங்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். “நோவா” அதற்கான ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

படப்பிடிப்பில் அனைவரும் மிகவும் உதவியாக இருந்தனர். தமிழ் உச்சரிப்பு, வசனங்கள் போன்றவற்றில் எனக்கு உதவினர். என். குடும்பத்திலிருந்து தூரமாக இருந்ததால் படக்குழுவே எனக்கு ஒரு குடும்பமாக மாறிவிட்டது. நோவா” வெளியான பிறகு தமிழில் மேலும் பல படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்..

Related posts

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் இன்று ஆலோசனை

Jai Chandran

அரிமாபட்டி சக்திவேல் ( பட விமர்சனம்)

Jai Chandran

வீராயி மக்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend