Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழன் பிரதமர் ஆக வேண்டும்: கமல் பரபரப்பு பேச்சு

தமிழன் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும்” என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்  ஹாசன் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் செப்டம்பர் 21ஆம் தேதி நடந்தது. கட்சித தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார்.
கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கமல்ஹாசன் பேசியது: அரசியலுக்குள் நுழையும்போது வேண்டாம் என்றார்கள். மக்கள் தோற்ற அரசியல் வாதியை கூட நினை வில் வைத்துக் கொள் வார்கள்; என்னைத்தான் சொல்கிறேன். தோல்வி என்பதும், பிரதமர் பதவி என்பதும் நிலையா னவை அல்ல.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதெல்லாம் எவ்வளவு ஆபத்தான பேச்சு. இந்தியாவுக்கு அது தேவையில்லை, தேவைப்படாது. கடந்த 2014-ல் நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்தியி ருந்தால் இன்றைக்கு இந்தியாவின் கதி என்ன? ஒட்டுமொத்தமாக அனைத்து தொகுதிகளையும் கீரைக் கட்டு போல் கையில் எடுத்திருப்பார்கள். அதன் பிறகு ஒரு திருநாமம் தானே இங்கு உரைக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டில் இதைச் செய்தால்தான் நமக்கு வழி விடுவார்கள் என்ற பயம் ஆட்சியாள ருக்கு வேண்டும். எப்படி ஜனநாயகத்தை புரட்டிப் போடுவது என குழம்பிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் தொகையை கட்டுப்படுத்த அறிவுறுத் தினர். அதை பின்பற்றி யதற்காக நாடாளு மன்றத்தில் பிரதி நிதித்துவத்தை குறைக்க பார்க்கின்றனர். நாட்டை நடத்திக் கொண்டி ருப்பது நாம் கொடுக்கும் பணம். சகோதர மாநிலங்களை பட்டினி போடச் சொல்லவில்லை. பகிர்ந்து உண்போம் என்கிறேன்.

சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பிய நம்மால் அவர்களுக்கு ஒரு தூதுவிட முடியவில் லையே. அந்தக் குரலாகத்தான் நாம் இருக்க வேண்டும். நான் இருப் பேன். ராஜ கோபால் என்னும் தெலுங்கு பேசுபவர் இங்கு முதல்வராக இருந்தார். ஆனால், ஒரு தமிழன் பிரதமர் ஆக முடியுமா? அதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும். கோவை யில் நடந்தது தோல்வி என்றால் அவர்கள் வென்று ஆட்சிக்கு வந்தது வெற்றியல்ல.

ஒரு பூத்துக்கு குறைந்தது 5 பேர் நியமிக்கப்பட வேண்டும் என 7 ஆண்டுகள் கழித்து கெஞ்சும்படி வைத்துவிட்டீர்களே. நம் தலைவர் அவ்வளவு பெரியவர் என கூட்டம் போட்டு சொல்ல வேண்டாம். கூட்டம் எவ்வளவு பெரியது என காட்ட வேண்டும். நான் எவ்வளவு பெரியவன் என காட்ட வேண்டிய இடத்தில் காட்டுகிறேன். நாளை அரசியல் நம்மை பார்த்து பேசப் போகிறது. இன்றைய அரசியல் வாதிகள் குறிப்பாக முதல்வர், நாம் எவ்வித எதிர்பார்ப்புமின்றி நன்றாக தேர்தல் பணி செய்ததாக கூறினார். 2026 தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக் கிறோம். அதற்கான ஏற்பாடுகளை செய்தே ஆக வேண்டும். மறுபடியும் சினிமாவுக்கு சென்றுவிட்டதாக விமர்சிக்கின்றனர். பின்னர் கோட்டை கஜானாவில் இருந்தா பணம் எடுக்க முடியும்? முழுநேர அரசியல்வாதி யாருமே இல்லை. கிடைக்கும் நேரத்தில் சரியாக வேலை செய் தால் போதுமானது. இன்றைக்கு எனக்கு என்ன என கேட்காதீ ர்கள். வேலை செய்யுங் கள், நாளை நமதாகும்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Related posts

‘ஜமா’ பாரி – ரம்யா புதிய பட ஷுட்டிங் நிறைவு..

Jai Chandran

கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விஜய் விஸ்வா..

Jai Chandran

கர்ப்பமாக இருந்தபோது கேட்ட கதை யூகி : ஆனந்தி பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend